Friday, 29 May 2015

.முல்லைத்தீவு கொக்கிளாயில் அத்துமீறல் முளைக்கிறது விகாரை


kokkilai 3

kokkilai 5


kokkilai 2


முல்லைத்தீவு கொக்கிளாயில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணியில் சட்ட விரோதமான முறையில் விகாரை அமைக்கப்பட்டு வருகின்றது. பொது மக்களின் தகவலையடுத்து இன்று காலை சம்பவ இடத்திற்குச் சென்ற வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இதை நேரில் உறுதிப்படுத்தியுள்ளார்.

முல்லைத்தீவு கொக்கிளாய் வைத்தியசாலைக் காணியின் ஒரு பகுதியையும் ,தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளையும் பாதை ஒன்றையும் அபகரித்து பிக்கு ஒருவரால் படையினர் துணையுடன் இந்த அத்துமீறல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

விகாரை அமைக்கப்படும் காணிக்குச் சொந்தமானவர்களில் ஒருவருடனும் ஆவணங்களுடனும் அந்த இடத்திற்குச் சென்றபோது 20 க்கும் அதிகமான படையினர் விகாரை கட்டும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர் என வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்தார்.

பிக்குவுடன் உரையாட வேண்டும் என கேட்டபோது பிக்கு அங்கில்லை என தெரிவித்தனர். உடனே படையினரிடம் அந்த ஆவணங்களைக் காட்டி , இது தனியார் காணி என்றும் அங்கு இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்வது சட்டவிரோதம் என்றும் தான் கூறியதாக ரவிகரன் தெரிவித்தார்.

தம்முடைய உயர் அதிகாரியின் பணிப்பின் பேரிலே அங்கு வந்து விகாரையை அமைப்பதாகவும் பிக்கு கொழும்பு சென்றிருப்பதாகவும் படையினர் தெரிவித்தனர்.
Loading...