இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
கடந்த 29ஆம் திகதி ஜனாதிபதியால் அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்ட 20 ஆவது திருத்த யோசனைகள் தொடர்பில் சிறு கட்சி தலைவர்களால் பரிசீலிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும். சிறு கட்சிகளின் நடவடிக்கை குழு ஏற்கனவே பலமுறை கூடி இந்த விவகாரம் தொடர்பான கொள்கை ஆவணம் ஒன்றை தயாரித்துள்ளது. நேற்று (நேற்று முன்தினம்) அலரி மாளிகையில் நடைபெற்ற பிரதமருடனான சந்திப்பிலும், இன்று காலை (நேற்று) தேர்தல் ஆணையாளருடன் நடைபெற்ற சந்திப்பிலும் இவை தொடர்பாக ஆராயப்பட்டன.
இந்நிலையில் அனைத்து சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று பிற்பகல் 3 மணிக்கு பத்தரமுல்லை வோடர்ஸ் எட்ஜ் விடுதியில் கூடி, நடவடிக்கை குழு தயாரித்துள்ள ஆவணத்தை ஆராய்ந்து முடிவு எடுக்க உள்ளனர். இக்கூட்டம் தொடர்பான அழைப்புகள் அனைத்து சிறு கட்சிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்
