Sunday, 10 May 2015

கொழும்பில் கடும் மின்னல் மழையும்



கடும் மழையால் கொழும்பு மாவட்டத்தில் 22 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இடம் பெயர்ந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இடம்பெயர்ந்த மக்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதால் மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மின்னல் தாக்கம் காரணமாக இந்த வருடம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளதென இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இன்று (10) பிற்பகல் வேளையில் நாட்டின் அநேகமான பகுதிகளில் கடும் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகளவு மழை வீழ்ச்சி பொலன்னறுவை மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளது.
Loading...