Sunday, 28 June 2015

புத்தி மழுங்கிப் போன சேகு இஸ்ஸதீன்!!



ஜனாதிபதிப் பதவி கிடைக்குமென்றிருந்தால், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றஊப் ஹக்கீம் தனது மதத்தையும் மாற்றிக் கொள்வார் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரட்ன விடுத்துள்ள சொல்லம்பு, பொதுபலசேனாவின் முஸ்லிம்கள் மீதான வில்லம்புகளைவிடவும் விஷமத் தனமானவை,


என்று முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தவிசாளரும், முன்னாள் ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சருமான சட்டத்தரணி எம்.எச்.சேகு இஸ்ஸதீன் தெரிவித்துள்ளார். முழு முஸ்லிம் சமுகத்திடம் பகிரங்கப் பொது மன்னிப்புகேட்டு தம் பாவங்களை களுவிக் கொள்ளுமாறு அமைச்சர் ராஜிதவுக்கு ஆலோசனை வழங்க வேண்டும்.



ஒரு சிறந்த பண்பாளரான நண்பரான அரசியல் வாதியான அமைச்சர் ராஜிதவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என தெரிவித்துள்ளார்.


இந்த அறிக்கையின் படி சேகு இஸ்ஸதீன் அவர்களுக்கு புத்தி மழுங்கி விட்டது என்றே சொல்லவேண்டும் 

Loading...