காயங்களில் புளு மேய்ந்து
வாய்களில் குரல் இழந்து
பாய்களில் படுக்க முடியாது
சேய்கள் திணறி அழுதபோது
நாய்கள் கூட வரவில்லை
உணவுக்கும் மருந்துக்கும்
தடை விதித்து
கனவுகளையும் நினைவுகளையும்
கந்தகத்தால் குதறும்போது
எந்தப்பயலும்
எட்டிப்பார்க்கவில்லை
இறந்த தாயின் முலையில்
பிறந்த குழந்தை
பால் தேடி அழுகையில்
எந்த பாவியருக்கும்
மனிதநேயம்
மனதை நெருடவில்லை
வெள்ளை உடைதரித்த
பள்ளி பிள்ளைகள்
கந்தக் கழுகுகளால்
கொத்திக் கொத்தி
புணர்கையில்
எந்த வெள்ளையனையும்
வலிகள் வதைக்கவில்லை
தூரத்தில் இருந்ததால்
துயரம் தெரியவில்லை
என்பது நிஜம்தான்
ஆனால்?
நாங்கள் பக்கத்தில்தானே
குளறினோம்
எத்தனை எத்தனை பேர்
தெருத்தெருவாக
உறக்மின்றி
குரல் எழுப்பினோம்
கேட்கவில்லையே
கேவலம்!
ஒரு ஆறுதல் கூட
சொல்லவில்லையே!
மனிதநேயமும் மதமும்
அரசியல் இருப்புக்காய்
அருவெருப்பாய் நின்றதுவே
இப்போது மட்டுமென்ன?
காயங்களை கிளறாதீர்
சவால்களை நல்லிணக்கம்
நலப்படுத்தும் என்கிறீர்
உங்கள் வாய்கள்
உயிர்கள் அழிக்கப்படுகையில்
எங்கே போனது.
ஒன்றா இரண்டா இழந்தோம்
ஒரு நொடியில் மறந்துபோக
-மனோ-
