ரமலான் விரதம் மனிதனை இறைவனுடன் இணைக்கிறது மற்றும் சாத்தானின் தூண்டுதல்களிலிருந்து விலக்கி வைக்கிறது என்று சொல்ப்படுகிறது.
இறைதூதர் முகமதுவை பெருமைப்படுத்துவதற்காக ரமலான் விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. உண்மையான அறிவின் ஒளியை உலகிற்குப் பரப்புவதற்காக கடவுளால் திட்டமிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர் அவர். இதன் காரணமாகவே மக்கள் ரமலான் மாதத்தில் விரதம் இருக்கவும் மற்றும் அனைத்து விதமான மோசமான விஷயங்களை செய்யாமலும் இருக்கின்றனர்.
ஒருவருடைய சுயவிருப்பத்தின் அடிப்படையில், அவருடைய உணவு மற்றும் பானங்களை சாப்பிடாமல் இருப்பதையே ரமலான் எனலாம். ஒருவர் இதை ஒரு முறை செய்யத் தொடங்கி விட்டால், கெட்டதாக கருதப்படும் அனைத்து விஷயங்களிலிருந்துமே அவர் விலகி இருக்க வேண்டும் என்பது தான் இதன் முக்கியமான விதிமுறையாகும்.
இதில் அனைத்து வகையான போதைப்பழக்கங்கள், உடலுறவு மற்றும் மனிதர்களுக்கு தீங்கானவை என்று கருதப்படும் எல்லா விஷயங்களுமே அடங்கும். ஒவ்வொரு மதத்திற்கும் சொந்தமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் பழக்கவழக்கங்கள் மற்றும் சடங்குகள் ஆகியவை இருப்பதைப் போலவே, இஸ்லாமிய மத்திலும் ரமலான் மாதத்தில் மிகவும் உன்னிப்பாகப் பின்பற்றப்படும் பழக்கங்களும், சடங்குகளும் உள்ளன.
இந்த சடங்குகள் இறைவழிபாட்டை வழிநடத்துவதோடு மட்டுமல்லாமல், விரதத்தை எப்படித் தொடங்க வேண்டும் மற்றும் எப்படி முடிக்க வேண்டும் என்றும் சொல்கின்றன. ரமலான் மாதத்தில் பின்பற்றப்படும் சில சடங்குகளைப் பற்றி இங்கு பார்ப்போம்
சேஹ்ரி
அதிகாலையில் பின்பற்றப்படும் முதல் சடங்காக சேஹ்ரி அல்லது சஹுர் உள்ளது. விரதத்தைத் துவங்கும் முன்னர், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடும் காலை நேர சிற்றுண்டியை தான் சேஹ்ரி என்றழைக்கிறார்கள். தன்னுடைய உடலுக்கு எந்தவித தீங்கும் ஏற்படாமல் காக்கும் திறனுள்ள, ஆசீர்வதிக்கப்பட்ட உணவாக சேஹ்ரி உணவு சொல்லப்படுகிறது.
அதிகாலையில் பின்பற்றப்படும் முதல் சடங்காக சேஹ்ரி அல்லது சஹுர் உள்ளது. விரதத்தைத் துவங்கும் முன்னர், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடும் காலை நேர சிற்றுண்டியை தான் சேஹ்ரி என்றழைக்கிறார்கள். தன்னுடைய உடலுக்கு எந்தவித தீங்கும் ஏற்படாமல் காக்கும் திறனுள்ள, ஆசீர்வதிக்கப்பட்ட உணவாக சேஹ்ரி உணவு சொல்லப்படுகிறது.
தூவா ஓதல்
சேஹ்ரியை சாப்பிட்ட பின்னர், அவர் இறைவனின் பெயரால் தூவா என்ற பிரார்த்தனையை ஓத வேண்டும்.
சேஹ்ரியை சாப்பிட்ட பின்னர், அவர் இறைவனின் பெயரால் தூவா என்ற பிரார்த்தனையை ஓத வேண்டும்.
நாள் முழுவதும் விரதம் இருத்தல்
அதற்குப் பின்னர், அந்த மனிதர் நாள் முழுவதும் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் மிகவும் கடுமையாக விரதத்தை கடைப்பிடிப்பார். அந்த மனிதர் தன்னுடைய எல்லா விதமான போதைப் பழக்கங்களையும் விரதத்தின் போது தவிர்ப்பார்.
நோன்பு வெறுமனே பசித்திருப்பது மாத்திரமல்ல ஒரு மனிதன் தனது ஐம்புலன்களையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதே நோன்பின் பிரதான கோட்பாடாகும். இதனை அல்லாஹ் தனது அருள் மறையாம் குர் ஆனில் இவ்வாறு கூறுகிறான்.
அதற்குப் பின்னர், அந்த மனிதர் நாள் முழுவதும் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் மிகவும் கடுமையாக விரதத்தை கடைப்பிடிப்பார். அந்த மனிதர் தன்னுடைய எல்லா விதமான போதைப் பழக்கங்களையும் விரதத்தின் போது தவிர்ப்பார்.
தொழுகை நடத்துதல்
பகல் நேரத்தில் அந்த மனிதர் தொழுகையை நடத்த வேண்டும் மற்றும் புனித குரானின் வசனங்களை ஓத வேண்டும்.
பகல் நேரத்தில் அந்த மனிதர் தொழுகையை நடத்த வேண்டும் மற்றும் புனித குரானின் வசனங்களை ஓத வேண்டும்.
அந்தி வேளையில் தொழுகை
பொழுது சாயும் வேளையில், விரதத்தை முடிக்கும் முன்னதாக அந்த மனிதர் நமாஸ் (தொழுகை) நடத்தி விரதத்தை முடிக்க வேண்டும்.
பொழுது சாயும் வேளையில், விரதத்தை முடிக்கும் முன்னதாக அந்த மனிதர் நமாஸ் (தொழுகை) நடத்தி விரதத்தை முடிக்க வேண்டும்.
விரதத்தை முடித்தல்
பிராத்தனைகளை செய்து முடித்த பின்னர், அவர்/அவள் தன்னுடைய விரதத்தை தண்ணீரைக் குடித்தும் மற்றும் ஹாலல் செய்த பேரீட்சைகளை சாப்பிட்டும் முடித்து வைக்க வேண்டும்.
பிராத்தனைகளை செய்து முடித்த பின்னர், அவர்/அவள் தன்னுடைய விரதத்தை தண்ணீரைக் குடித்தும் மற்றும் ஹாலல் செய்த பேரீட்சைகளை சாப்பிட்டும் முடித்து வைக்க வேண்டும்.
இப்தார்
விரதத்தை முறையாக முடித்து வைத்த பின்னர், அவர்/அவள் பல்வேறு விதமான பதார்த்தங்களை உடைய இப்தார் உணவு விருந்தை சாப்பிட வேண்டும். அது அசைவ உணவாக இருந்தால், கண்டிப்பாக ஹலால் செய்யப்பட்டிருக்க வேண்டும். சர்க்கரை, அல்வா, திராட்சைப் பழம், ராக் மிட்டாய் மற்றும் பால் அல்லது தண்ணீர் போன்ற இனிப்பான உணவுகளைக் கொண்டு விரதத்தை முடித்து வைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
விரதத்தை முறையாக முடித்து வைத்த பின்னர், அவர்/அவள் பல்வேறு விதமான பதார்த்தங்களை உடைய இப்தார் உணவு விருந்தை சாப்பிட வேண்டும். அது அசைவ உணவாக இருந்தால், கண்டிப்பாக ஹலால் செய்யப்பட்டிருக்க வேண்டும். சர்க்கரை, அல்வா, திராட்சைப் பழம், ராக் மிட்டாய் மற்றும் பால் அல்லது தண்ணீர் போன்ற இனிப்பான உணவுகளைக் கொண்டு விரதத்தை முடித்து வைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஐம்பெரும் கடமைகளுள் ஒன்றான நோன்பின் மாண்பை பேணுவோம்
‘உங்களின் முன்னோருக்கு விதியாக்கப்பட்டதைப் போன்று உங்களுக்கும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது. பெருமானார் (ஸல்) அவர்கள் அருளியதாக ஹஸ்ரத் சல்மான் (ரலி) அறிவிக்கின்றார்கள். ஷஃபான் மாத இறுதியில் ஒரு நல் உபதேசம் செய்தார்.
மனிதர்களே! உங்களிடம் ஓர் மகத்தான மாதம் வருகின்றது. இது பரக்கத் பொருந்திய மாதமாகும். இதில் லைலதுல் கத்ர் என்ற ஓர் இரவு இருக்கிறது. அது ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவாகும். இதில் நோன்பு நோற்பதை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான். அதனுடைய இரவு நேரங்களில் நின்று (தராவீஹ்) தொழுவது நன்மைக்குரிய செயலாக ஆக்கியுள்ளான்.
எந்த மனிதர் இம் மாதத்தில் ஒரு நற்செயலை செய்து அல்லாஹுத்தாலாவை நெருக்கத்தை உண்டாக்கிக் கொள்கிறாரோ அவர் றமழான் அல்லாத மற்ற மாதங்களில் ஒரு பர்ழை நிறைவேற்றியவர் போலாவார். மேலும் இம் மாதத்தில் ஓர் பர்ழை நிறைவேற்றியவர் றமழான் அல்லாத மாதங்களில் எழுபது பர்ழுகளை நிறைவேற்றியவர் போலாவார். இம் மாதம் பொறுமையின் மாதமாகும். பொறுமையின் பிரதிபலம் சுவர்க்கமாகும்.
எனவே, நாம் நோன்பு நோற்று வாயையும் வயிற்றையும் கட்டுப்படுத்துவது போல எமது இதர உறுப்புகளையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அப்போது தான் நோன்பின் பலாபலன் எம்மைச் சேரும். நல்லதை பேசி நல்லதை செய்து இதர மனிதர்களுடன் சுமுகமாகவும் சுக துக்கங்களில் பங்கு கொள்வதாலும் அல்லாஹ் தந்தவற்றில் ஏனையோருக்கு வழங்குவதாலும் பரக்கத் எனும் அபிவிருத்தியினை அல்லாஹ் வழங்குகிறான்.
எந்த மனிதரேனும் ஒரு நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்கிறாரோ அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றது. நரக நெருப்பிலிருந்து அவர் விடுதலையாக காரணமாகிறது. இது மாத்திரமல்ல. நோன்பு நோற்றவருடைய நன்மையை போன்று நன்மையும் கிடைத்து விடுகின்றது.
எனினும் நோன்பாளியுடைய நன்மையிலிருந்து எதுவும் குறைக்கப்படமாட்டாது என அண்ணல் நபி (ஸல்) கூறிய போது ஸஹாபாக்கள் யாரஸூலுல்லாஹ் எங்களில் நோன்பாளிகளை நோன்பு திறக்கும் சக்தி பெற்றவர்கள் இல்லையே என்ற போது றஸூல் (ஸல்) அவர்கள் வயிறு நிறைய உணவளிக்க வேண்டும் என்பதில்லை. மாறாக ஒரு பேரீத்தம்பழம் அல்லது ஒரு மிடர் தண்ணீர் அல்லது ஒரு மிடர் பால் இவற்றில் ஏதேனும் ஒன்றை கொண்டு நோன்பு துறக்கச் செய்தாலும் அவருக்கு அல்லாஹ் இந்த நன்மையை வழங்கி விடுவான் என்று கூறினார். இம்மாதத்தின் முதற் பகுதி ரஹ்மத்துடையதாகவும் நடுப் பகுதி பாவ மன்னிப்பாகவும் இறுதிப் பகுதி நரக நெருப்பை விட்டும் விடுவிப்பதாக இருக்கின்றன.
எவரேனும் இம் மாதத்தில் தன் அடிமைகள், வேலைக்காரர்களின் வேலைப் பளுவை குறைப்பாரோ அவரை அல்லாஹ் மன்னித்து நரக விடுதலையும் அளித்து விடுவான் எனவும் அருளினார்கள். எனவே தான் றமழான் மாதத்திற்கு முன்னரே அதாவது, ஷஃபான் மாத இறுதியிலேயே ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் புனித மிகு றமழான் நோன்பின் சிறப்பு பற்றி கூறினார்கள்.
எனவே, நாமும் புனித நோன்பு மாதத்தினை ஒரு வினாடியேனும் வீணாகக் கழிக்காது வீணான விளையாட்டிலும், வீண் பேச்சுக்களிலும், தொலைக்காட்சியிலும் இதர பொழுது போக்குகளிலும் ஈடுபடாது ஐந்து வேளைத் தொழுகைகளை இமாம் ஜமாஅத்துடன் தொழுது, இதர சுன்னத்தான நபீலான தொழுகைகளில் ஈடுபட்டு திக்ர், ஸலவாத்து, ஸ்திஃபார் எனும் பாவமன்னிப்பு, குர்ஆன் திலாவத் போன்ற இன்னோரன்ன நல்ல அமல்களில் ஈடுபட்டு வருவதுடன் நோன்பின் மாண்பைப் பேணி இரட்டிப்பு நன்மைகளைப் பெறுவோமாக.
இது தவிர, ஏழையோரின் துயர் துடைக்கவென எம் மீது விதிக்கப்பட்ட ஸகாத் எனும் ஏழை வரியினை முறையாக கணக்கிட்டு வழங்கி எமது பொருட்களிலும் வாழ்க்கையிலும் பரக்கத்தினையும் அபிவிருத்தியினையும் பெற்று, நோன்பின் பலா பலன்களை முழுமையாகவும் முறையாகவும் பெற்ற நல் மக்களாக எமை ஆக்கி அருள் புரிவானாக ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
– எம்.ஏ.எம்.ஹஸனார்
