சர்வதேச பெண் பொலிஸ் அமைப்பினால் வழங்கப்படும் International Recognition and Scholarship விருது இம்முறை இலங்கை பிரதி பொலிஸ் அதிகாரி தீமதி பெரியப்பெருமவுக்கு கிடைத்துள்ளது.
இவ்வகையான விருது இலங்கைக்கு கிடைத்திருப்பது இதுவே முதல் தடவையாகும்.
குறித்த விருது எதிர்வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் இடம்பெறவுள்ள விருது வழங்கும் நிகழ்வில் வழங்கப்படவுள்ளது.
உலகின் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் பெண் அதிகாரிகளின் செயற்திறன், செயல்பாடுகளை கருத்தில் கொண்டு இவ்விருது வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
