தற்போது கிழக்கில் அரசியல் கட்சிகளின் கட்சி விட்டு கட்சி தாவும் திருவிளையாடல் மிகவும் மோசமான நிலையை அடைந்து உள்ளது ,சாதாரண பொதுமகன் ஒருவன் கூட வாய் விட்டுச் சிரித்து நையாண்டி செய்யும் நிலைமைக்குத் தள்ளப் பட்டுள்ளது. காரணம் கட்சிகளுக்கு கொள்கை என்பது ஒன்றும் இல்லை , கட்சியில் இணைந்துள்ளவர்களின் சமூகத் சீர் திருத்தம் ஆராயப் படாமை. இப் பெரும் பிரதேசத்தில் விரல் விட்டு எண்ணக் கூடிய இந்த தெத்துக் கோடு பழகும் வேட்பாளர்களை விட்டால் வேறு யாரும் இல்லையோ என்பதுதான் ஒரு சாதாரண குடிமகனின் கேள்வி
