Tuesday, 25 August 2015

நிஷா பிஷ்வால் இன்று இலங்கைக்கு


இலங்கை விஜயத்தின்போது நிஷா பிஷ் வால் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர உள்­ளிட்ட பல்­வேறு முக்­கி­யஸ்­தர்­க­ளுடன் விசேட சந்­திப்­புக்­களை நடத்தவுள்ளார்.

இன்று காலை வெ ளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் நிஷா பிஷ்வால் வெ ளிவிவகார அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

அத்துடன் நாளைய தினம் காலையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் கொழும்­பி­லுள்ள அமெ­ரிக்க தூது­வரின் வாசஸ்­த­லத்தில் விசேட பேச்­சு­வார்த்­தையில் ஈடு­ப­ட­வுள்­ள­தாக இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் வெ ளிவி­வ­கா­ரங்­க­ளுக்­கான செய­லா­ளரும் யாழ்.தேர்தல் மாவட்­டத்தின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராகத் தெரிவு செய்­யப்­பட்­ட­வ­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்தார்.

இச்­சந்­திப்­பின்­போது ஆட்சி மாற்­றத்­திற்குப் பின்­ன­ரான நிலை­மைகள், சம­கால அர­சியல் நிலை­மைகள் உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் குறித்து பேச்­சு­வார்த்தை நடாத்­த­வுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

இதே­வேளை எதிர்­வரும் செப்­டெம்பர் 14ஆம் திக­தி­யன்று ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் கூட்­டத்­தொடர் ஆரம்­ப­மா­க­வுள்ள நிலையில் இலங்­கையில் இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் மனி­தா­பி­மான சட்­ட­மீ­றல்கள் தொடர்­பான விசா­ரணை அறிக்கை சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது.

இந்­த­அ­றிக்கை சகல வித­மான சாட்­சி­யங்­க­ளையும் உள்­ள­டக்­கிய வலு­வான அறிக்­கை­யாக அமைந்­தள்­ள­தாகத் தெரி­ய­வ­ரு­கின்­றது.

அதே­நேரம் இலங்­கையில் பொதுத் தேர்தல் இடம்­பெற்று பாரா­ளு­மன்ற கன்னி அமர்வே இடம்­பெ­றாத நிலையில் அமெ­ரிக்க இரா­ஜாங்கச் செய­லாளர் உள்­ளிட்ட உய­ர­தி­கா­ரிகள் இலங்­கைக்கு விஜயம் செய்­கின்­ற­விஜயம் செய்கின்றனர்.கடந்த 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அதுல் கேஷாப் தனது நியமனக் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Loading...