|
விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தம் தொடர்பாக கருணா தெரிவித்த தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என்று ராணுவ உயரதிகாரிகள் மறுப்புத் தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற இறுதி யுத்தம் தொடர்பாக பல தகவல்களை கருணா அண்மையில் தமிழகத் தொலைக் காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தார். அதில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மரணம் தொடர்பாக கருணா வெளியிட்ட கருத்தை முன்னாள் ராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா உடனடியாக மறுத்திருந்தார். குறித்த நேர்காணலில் இந்தியப் படையினரின் ஒரு பிரிவு வவுனியாவில் நிலை கொண்டிருந்ததாகவும், ரேடார் நடவடிக்கைகள் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை அவர்களே மேற் கொண்டதாகவும் கருணா தொடர்ந்தும் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாகவும் தற்போது ராணுவ அதிகாரிகள் கடுமையான மறுப்பை வெளியிட்டுள்ளனர். இறுதி யுத்தம் தொடர்பாக கருணா வெளியிடும் தகவல்கள் அனைத்தும் பொய் எனவும், இந்தியப் படையினர் ஒருபோதும் வவுனியாவில் நிலை கொண்டிருக்கவில்லை என்றும் அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ராணுவத்தினரை மேற்கோள்காட்டி திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
|
Saturday, 5 September 2015
![]() |
இறுதிப் போரில் இந்திய இராணுவம் பங்கேற்கவில்லை! – என்கிறது இராணுவம் |
Loading...
