Saturday, 5 September 2015

பழைய கடவுச்சீட்டை தொடர்ந்தும் பயன்படுத்தலாம்

பழைய கடவுச்சீட்டை தொடர்ந்தும் பயன்படுத்தலாம்
பழைய கடவுச்சீட்டை தொடர்ந்தும் பயன்படுத்தலாம்
புதிய கடவுச்சீட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள போதிலும் பழைய கடவுச்சீட்டை தொடர்ந்தும் பயன்படுத்த முடியும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.கை விரல் அடையாளத்துடன் புதிய தொழில்நுட்ப முறையில் தயாரிக்கப்பட்டுள்ள கடவுச் சீட்டு விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் எம்.என் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

ஒரே நாளில் கடவுச்சீட்டினை பெற்றுக் கொள்வதற்கு 3500 ரூபாவும் சாதாரண முறையில் பெற்றுக் கொள்வதற்கு 1500 ரூபாவும் பெற்றுக்  கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை கடவுச் சீட்டுகளை விநியோகிப்பதற்கான கருமபீடங்களை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய 16ஆக இருந்த கரும பீடங்கள் தற்போது 32 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் எம்.என் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
Loading...