** இயன்றவரை தமிழே பேசுவேன்.
தமிழே எழுதுவேன். சிந்தனை செய்வது தமிழிலே செய்வேன்.
** எப்போதும் பராசத்தி, முழு உலகின்முதற் பொருள்,அதனையே தியானம் செய்து கொண்டிருக்க முயற்சிப்பேன். அதனைக் குறித்தே ஓயாமல் எழுதிக் கொண்டிருக்க முயற்சிப்பேன்.
** பொழுது வீணே கழிய இடங்கொடேன். லெளகிக காரியங்களை ஊக்கத்துடனும் மகிழ்ச்சியுடனும், அவை தோன்றும்பொழுதே பிழையுறச் செய்து முடிக்கப் பழகுவேன். உடலை நல்ல காற்றாலும், இயன்றவரை சலிப்பதாலும் தூய்மையுறச் செய்வேன்.
** மறைத்தும், மறந்தும் தற்புகழ்ச்சி பாராட்டுதலை விரும்பேன்.
** மூடரின் உள்ளத்தில் என்னைப்பற்றி பொய் மதிப்புண்டாக இடங்கொடேன்.
** சர்வ சக்தியுடைய பரம்பொருளைத் தியானத்தால் என்னுள்ளே புகச் செய்து எனது தொழில்களெல்லாம் தேவர்களின் தொழில்போல் இயலுமாறு சூழ்வேன்.
** பொய்மை, இரட்டுறமொழிதல், நயவஞ்சனை, நடிப்பு இவற்றால் போருளீட்டிப் பிழைத்தல் நாய்ப் பிழைப்பென்று கொள்வேன்.
** இடையறாத தொழில் புரிந்து இவ்வுலக பெருமைகள் பெற முயல்வேன். இல்லாவிடின் விதிவசமென்று மகிழ்ச்சியோடிருப்பேன். எப்போதும் மலர்ந்த முகம், இனிய சொல், தெளிந்த சித்தம் இவற்றோடிருப்பேன்.
