தேசியப் பாதுகாப்பில் அரசாங்கம் முக்கியத்துவம் காட்டுவதில்லை
அரசாங்கம் தேசியப் பாதுகாப்பு விவகாரங்களில் எவ்வித முக்கியத்துவத்தையும் காட்டுவதில்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் ,கிரித்தலே இராணுவ முகாமிற்கு சீல் வைக்க நேரிட்டமை, மிலேனியம் சிட்டி சம்பவம் போன்றன காட்டிக் கொடுப்புக்களாகவே கருதப்பட வேண்டும்.
தற்போதைய அரசாங்கம் வரலாற்றில் என்றுமில்லாத அளவிற்கு நாட்டின் புலனாய்வுப் பிரிவினரை காட்டிக் கொடுத்து வருகின்றது.அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளினால் புலானய்வுப் பிரிவில் பெரும் சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளது.இந்த நிலைமையானது பாரிய அழிவிற்கான முன் சமிக்ஞையாக கருதப்பட வேண்டும்.
அரசாங்கம் இவ்வாறு காட்டி கொடுத்து வருகின்றவர்கள் தாய் நாட்டை பாதுகாத்தவர்களாவர்.
அத்தோடு,தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் கிடையாது எனக் கூறி வரும் அரசாங்கம் தேசிய பாதுகாப்பை பூச்சியமாக மதித்து செயற்பட்டு வருகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
