Friday, 1 January 2016

நீர் வளங்கள் வடிகாலமைப்பு சபை உழியர்களின் சத்தியபிரமாண நிகழ்வு


றிசாத் ஏ காதர்

அட்டாளைச்சேனை தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை காரியாலயத்தில் 2016ஆம் ஆண்டுக்கான புதுவருட நிகழ்வு (2016.01.01) இன்று  நிலைய பொறுப்பதிகாரி பொறியியலாளர் யு.எல்.சி. பாவா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தேசிய அரசாங்கத்தின் அரச ஊழியர்களுக்கான கொள்கைப்பிரகடனம் வாசிக்கப்பட்டதுடன் ஊழியர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வும் இடம்பெற்றது.

மேலும் விசேடமாக இந்நிகழ்வில் யுத்தத்தினால் உயிர் நீத்த படை வீரர்களுக்கான இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


-

Loading...