தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபகர் அல் -ஹஜ் மொஹிடீன் பாவா (தடாகத்தின் ஆலோசகர்) அவர்களது ஆலோசனையில் தடாகம் கலை இலக்கிய கல்வி கலாசார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு நடத்தும் பாடசாலை மாணவ, மாணவியருக்கான சர்வதேச கவிதைப் போட்டி 2015 போட்டி விவரங்கள்: 1. போட்டி எதிர் வரும் ஜூன் மாதம் ( 01-06-2015 ) முதல் ( 30-06-2015 )வரை மட்டுமே. 2. ஒரு மாணவர் ஒரு கவிதை மட்டுமே எழுத வேண்டும். 3. கவிதை தனது சொந்தக் கவிதையாக இருத்தல் வேண்டும். 4. கவிதை சமர்ப்பிக்கும் மாணவர்கள் தங்களின் மின்னஞ்சல் (Email) மற்றும் அலைபேசி எண், பாடசாலையின் பெயர், தனது புகைப்படப்பிரதி ஆகியவற்றையும் இணைத்தல் வேண்டும். 5. உங்களுக்குப் பிடித்த தலைப்புக்களில் கவிதைகளைப் போட்டிக்கு அனுப்பி வைத்தல் வேண்டும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி sk.risvi@gmail.com பரிசு விவரங்கள்: சிறந்த கவிதைக்கு முதலாம், இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பெறுவோருக்கு சான்றிதழும், தரமான புத்தகப்பரிசும் வழங்கப்படும். குறிப்பு: சான்றிதழும், புத்தகப்பரிசும் வெற்றிப் பெற்ற மாணவர்களின் பாடசாலை முகவரிக்கு அனுப்பப்படும். கவிதை எழுதும் மாணவர்கள் தவறாமல் தங்களது பாடசாலை அல்லது கல்லூரி முகவரியைத் தங்களின் கவிதைக்கு கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்
றியாஸ் முஹமட், இணைப்பாளர் தடாகம் கலை இலக்கிய கல்வி கலாசார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு
