Friday, 1 May 2015

கொழும்பில் மேதின பேரணிகள், கூட்டங்கள்

சர்­வ­தேச தொழி­லாளர் தின­மான மே தினம் இன்று கொண்­டா­டப்­ப­ட­வுள்ள நிலையில் பிர­தான அர­சியல் கட்­சிகள் தமது மே தினக்­கூட்­டங்­களை கொழும்பில் நடத்­து­கின்­றன.

 அத்­துடன் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு திரு­கோ­ண­ம­லையில் மே தினக்­கூட்­டத்தை நடத்­து­வ­தற்கு தீர்­மா­னித்­துள்­ளது.மலை­யக அர­சியல் கட்­சி­களும் தொழிற்­சங்­கங்­களும் மலை­ய­கத்தின் பல்­வேறு பகு­தி­க­ளிலும் மேதினக் கூட்­டங்­களை நடத்­த­வுள்­ளன.

ஸ்ரீறி­லங்கா சுதந்­திரக் கட்சி கொழும்பு ஹைட்பார்க் மைதா­னத்­திலும் ஐக்­கிய தேசிய கட்சி கெம்பல் பார்க் மைதா­னத்­திலும் இம்­முறை மேதினக் கூட்­டங்­களை நடத்­த­வுள்­ளன.

இதே­வேளை ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி இம்­முறை இரண்­டாகப் பிரிந்து மே தினக்­கூட்­டங்­களை கொழும்பில் நடத்­த­வுள்­ளது. 11 வரு­டங்­க­ளுக்கு முன்னர் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி உரு­வாக்­கப்­பட்­ட­தி­லி­ருந்து இம்­மு­றையே இரண்­டாகப் பிரிந்து மேதினக் கூட்­டங்கள் இந்தக் கட்­சி­யினால் நடத்­தப்­ப­ட­வுள்­ளன.

அதா­வது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் இணைந்து ஒரு பிரிவும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுடன் இணைந்து மற்­று­மொரு பிரிவும் மேதினக் கூட்­டங்­களை நடத்­த­வுள்­ளன. அதா­வது இன்­றைய தினம் கொழும்­பிலும் அதனை அண்­மித்த பிர­தே­சங்­க­ளிலும் 17 பேர­ணி­களும் கூட்­டங்­களும் இடம்­பெ­ற­வுள்­ளன.

மேலும் மேதி­னத்தை முன்­னிட்டு கொழும்பில் பாது­காப்பு ஏற்­பா­டுகள் பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. அத்­துடன் இன்று வெள்­ளிக்­கி­ழமை பிற்­பகல் வேளையில் அமு­லுக்கு வரும் வகையில் விஷேட போக்கு வரத்து ஒழுங்­கு­க­ளையும் பொலிஸ் போக்கு வரத்து பிரிவு முன்­னெ­டுக்­க­வுள்­ளது.

அத்­துடன் கொழும்பு நகரின் பாது­காப்­புக்­காக 2800 பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் விஷேட கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­தா­கவும் போக்­கு­வ­ரத்து கட­மை­க­ளுக்­கென பிரத்­தி­யே­க­மாக 2250 பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் தயார் நிலையில் வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சுதந்­திரக் கட்சி

சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி இம்­முறை மே தினக்­கூட்­டத்தை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் கொழும்பு ஹைட்பாக் மைதா­னத்தில் நடத்­த­வுள்­ளது. கொழும்பில் மூன்று பகு­தி­க­ளி­லி­ருந்து ஊர்­வ­ல­மாக வர­வுள்ள சுதந்­தி­ரக்­கட்சி ஆத­ர­வா­ளர்கள் இரண்டு மணி­ய­ளவில் ஹைட்பார்க் மைதா­னத்தை வந்­த­டைவர்.
சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி ஆத­ர­வா­ளர்கள் மரு­தானை காமினி மண்­டப சந்தி, விகா­ர­மா­ஹே­தவி பூங்கா, புருக்பொன்ட் சந்தி, ஆகிய இடங்­க­ளி­லி­ருந்து ஊர்­வ­ல­மாக ஹைட்பார்க் மைதா­னத்­திற்கு வர­வுள்­ளனர். அதன் பின் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறினே தலை­மையில் பிர­தான கூட்டம் நடை­பெறும். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால பிர­தான மேதின உரையை நிகழ்த்­த­வுள்ளார். இதன்­போது 19 ஆவது திருத்தச் சட்­டத்தின் நிறை­வேற்றம் தொடர்பில் பிரஸ்­தா­பிப்பார் என்றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

மஹிந்த ஆத­ரவு கூட்டம்

இதே­வேளை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த­ரா­ஜ­ப­க்ஷ­வுக்கு ஆத­ரவு வழங்கும் ஐக்­கிய மக்கள் சுதந்­தி­ரக்­கட்­சியின் பங்­கா­ளிக்­கட்­சிகள் கிரு­லப்­ப­னை­யி­லுள்ள அத்­து­லத்­மு­தலி மைதா­னத்தில் மே தினக்­கூட்­டத்தை நடத்­த­வுள்­ளன.

இந்தக் கூட்­டத்தில் கலந்து கொள்­ளு­மாறு மஹிந்­த­ரா­ஜ­ப­க்ஷ­வுக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருந்­த­போ­திலும், அவர் கூட்­டத்தில் கலந்து கொள்ள மாட்டார் என்றும், பதி­லாக வாழ்த்து செய்­தி­யொன்றை அனுப்­பி­வைப்பார் என்றும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதில் தினேஷ் குண­வர்த்­தன தலை­மை­யி­லான மக்கள் ஐக்­கிய முன்­னணி, விமல் வீர­வன்ச தலை­மை­யி­லான தேசிய சுதந்­திர முன்­னணி, உள்­ளிட்ட சில கட்­சிகள் மஹிந்த ஆத­ரவு மேதி­னக்­கூட்­டத்தில் கலந்து கொள்­ள­வுள்­ளன.

ஐக்­கிய தேசிய கட்சி

இது இவ்­வா­றி­ருக்க ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் மேதி­னக்­கூட்டம் பொரளை கெம்பல் பாக் மைதா­னத்தில் நடை­பெ­ற­வுள்­ளது. கட்­சியின் தொழிற்­சங்­க­மான தேசிய ஊழியர் சங்கம், இளைஞர் மற்றும் மகளிர் அமைப்­புக்கள் இணைந்து இந்த மே தினக்­கூட்­டத்தை ஏற்­பாடு செய்­துள்­ளன. இதில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கலந்­து­கொண்டு பிர­தான உரையை நிகழ்த்­த­வுள்ளார். புதிய அர­சாங்­கத்தின் 100 நாள் வேலைத்­திட்டம் தொடர்பில் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க உரை­யாற்­றுவார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

ஜே.வி.பி.

மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் மேதினம் கூட்டம் கொழும்பு பி.ஆர்.சி. மைதா­னத்தில் இடம் பெற­வுள்­ளது. தெஹி­வளை, .மஹிந்த வித்­தி­யா­ல­யத்­தி­லி­ருந்து மக்கள் விடு­த­லையின் முன்­ன­ணியின் ஆத­ர­வா­ளர்கள் பி.ஆர்.சி. மைதா­னத்­திற்கு ஊர்­வ­ல­மாக வருகை தரு­வார்கள். பிர­தான மேதினக் கூட்­டத்தில் மக்கள் விடு­தலை முன்­ன­ணியி்ன் தலைவர் அனுர குமார திசா­நா­யக்க மற்றும் லால்­காந்த விஜித்த ஹேரத் எம்.பி. உள்­ளிட்டோர் உரை­யாற்­ற­வுள்­ளனர்.

கூட்­ட­மைப்பு

தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் மே தினக்­கூட்டம் இரா. சம்­பந்தன் தலை­மையில் வடக்கு கிழக்கை உள்­ள­டக்­கி­ய­தாக நடை­பெறும் பிர­தான கூட்டம் இம்­முறை திரு­கோ­ண­ம­லையில் நடை­பெறும்.

ஜன­நா­யகக் கட்சி

மேலும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா தலை­மை­யி­லான ஜன­நா­யகக் கட்­சியின் மேதினக் கூட்டம் நார­ஹென்­பிட்டி ஷாலிகா மண்­ட­பத்தில் நடை­பெ­ற­வுள்­ளது.

ஜன­நா­யக மக்கள் முன்­னணி

மேலும் ஜனநாயக மக்கள் முன்னணியின் மேதினக்கூட்டம் அதன் தலைவர் மனோகணேசன் தலைமையில் கொழும்பு ஜிந்துப்பிட்டியில் நடைபெறும். இந்தக்கட்சியின் பிரதான கருப்பொருளாக அதிகாரப் பரவலாக்கல் மற்றும் தேசிய ஒற்றுமை என்பன முன்வைக்கப்படும்.

நவ சம சமாஜ கட்சி

நவசமசமாஜக்கட்சியின் மே தினக்கூட்டம் அதன் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ணவின் தலைமையில் கூட்டம் கொழும்பு குணசிங்கபுர பஸ்நிலைய வளாகத்தில் நடைபெறும். மேலும் மலையக அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் மலையகத்தின் பல்வேறு பகுதிகளில் மேதினக் கூட்டங்களை நடத்தவுள்ளன.

Loading...