Friday, 1 May 2015

கிரா­மத்­தி­லி­ருந்­துதான் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் வரு­கி­றார்கள்

கிரிக்­கெட்டை நாம் கிரா­மத்­திற்கு எடுத்துச் செல்­ல­வேண்டும். கிரிக்­கெட்டை மட்­டு­மல்ல, நமது விளை­யாட்­டையே கிரா­மத்­தி­லி­ருந்து ஆரம்­பித்தால் சிறந்த­தொரு பெறு­பேற்றை நாம் பெற்­றுக்­கொள்­ள­மு­டியும் என தெரி­வித்தார். இலங்கைக் கிரிக்கெட் இடைக்­கா­ல ச­பையின் தலைவர் சிதத் வெத்­த­முனி.

இலங்கைக் கிரிக்கெட் கேட்போர் கூடத்தில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போதே அவர் மேற்­படி தெரி­வித்தார். அவர் அங்கு மேலும் தெரி­விக்­கையில்,

கிரா­மத்­தி­லி­ருந்­துதான் சிறந்த வீரர்கள் வரு­கி­றார்கள். ஆனால் நாங்­களோ தலை­ந­க­ரத்­தில்தான் விளை­யாட்­டுக்­கான அனைத்து வளங்­க­ளையும் கொடுத்­துக் கொண்டிருக்­கிறோம். இது மாற­வேண்டும். நக­ரத்தைப் போன்றே கிராம மட்­டத்­திலும் சம்­பூ­ர­ண­மான வளங்­களை அவர்­க­ளுக்கு ஏற்­ப­டுத்திக் கொடுத்தல் அவ­சியம்.

இப்­ப­டி­யான செயற்­பா­டு­களால் நாம் எதிர்­கால கிரிக்­கெட்டை ஆக்­க­பூர்­வ­மாக உரு­வாக்­க­மு­டியும் என்றார்.

கொழும்பு ஆர்.பிரே­ம­தாஸ மைதா­னத்தில் நீச்சல் தடாகம் ஒன்றை உட­ன­டி­யாக அமைக்­க­வுள்­ள­தா­கவும் சிதத் வெத்­த­முனி தெரி­வித்தார். கிரிக்கெட் மைதா­னத்தில் நீச்சல் தடாகம் ஒன்று இருக்­க­வேண்­டி­யது அவ­சியம். காரணம் பயிற்­சி­க­ளின்­போது மேல­திக பயிற்­சி­க­ளுக்கு இது அத்­தி­யா­வ­சியம். இதை கூடிய சீக்­கி­ரத்தில் அமைப்­ப­தற்கு நாம் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கிறோம். அதேபோல் எந்­நே­ரத்­திலும் பயிற்­சி­களை மேற்­கொள்­ளக்­கூ­டிய வகையில் உள்ளக பயிற்சி நிலையம் ஒன்றை உருவாக்கவும் நாம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம் என்று சிதத் வெத்தமுனி குறிப்பிட்டார்.

Loading...