Thursday, 28 May 2015

கவிதை : விழுந்து போனது பழைய மரம்.

Naavuk Arasan


Naavuk Arasan
பின்பற்றும் 
ஆணிவேரை ஆழமாக்கி 
கால்ப் பரப்பில் 
வீரியத்தை 
உறிஞ்சிக்கொண்டு 
புரட்சிகரமாகக் 
கிளை பரப்பிய 
இலைகளில் 
பிரதிபலித்துக்கொண்டு 
இருட்டின பிறகும் 
அலட்சியமாகவே 
எழுந்து நின்றது
இளந்தாரி 
மரம் ...

மூச்சுவிடக் 
கஷ்டமான 
ஒரு
மண் அரிக்கும் 
மழை நாளில் 
வயோதிபத்துக்கு 
எதிராக எழுந்து 
தனித்தன்மையைப் 
புறக்கணித்துவிட்டு
கும்பிடு போட்டு
வளைந்து போன 
முதுகெலும்பை 
நிமிர்த்த விரும்பாமல்
பக்க வேர்களுக்கும் 
வலிக்காமல் 
வீரமாக 
விழுந்து போனது 
பழைய 
மரம்.




.
Loading...