Thursday, 28 May 2015

கவிதை : விழுந்து போனது பழைய மரம்.

Naavuk Arasan


Naavuk Arasan
பின்பற்றும் 
ஆணிவேரை ஆழமாக்கி 
கால்ப் பரப்பில் 
வீரியத்தை 
உறிஞ்சிக்கொண்டு 
புரட்சிகரமாகக் 
கிளை பரப்பிய 
இலைகளில் 
பிரதிபலித்துக்கொண்டு 
இருட்டின பிறகும் 
அலட்சியமாகவே 
எழுந்து நின்றது
இளந்தாரி 
மரம் ...

மூச்சுவிடக் 
கஷ்டமான 
ஒரு
மண் அரிக்கும் 
மழை நாளில் 
வயோதிபத்துக்கு 
எதிராக எழுந்து 
தனித்தன்மையைப் 
புறக்கணித்துவிட்டு
கும்பிடு போட்டு
வளைந்து போன 
முதுகெலும்பை 
நிமிர்த்த விரும்பாமல்
பக்க வேர்களுக்கும் 
வலிக்காமல் 
வீரமாக 
விழுந்து போனது 
பழைய 
மரம்.




.
Loading...
  • நல்ல குடிமகன் வெற்றிலைக்கு போடமாட்டான்’..!!26.07.2015 - Comments Disabled
  • How Should Sri Lanka Marginalise Ethnic Parties?12.08.2015 - Comments Disabled
  • ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நியமனங்களை ரத்துசெய்ய வழக்கு27.08.2015 - Comments Disabled
  • கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிடுவோர் பெயர், விபரம்14.07.2015 - Comments Disabled
  • உயர்தர பெறுபேறுகள் நாளை வெளிவரும்?30.12.2015 - Comments Disabled