Tuesday, 5 May 2015

காற்றில் பறக்கும் தூசுகளாக்கி விடுவதா ?


கலைமகள் ஹிதயா ரிஸ்வி 


தாயின் கருவறைகுள்ளேயிருந்தே 
இன்னொரு 
பிறப்பு...., 
வளர்ப்பு ..., 
இறப்பு ...,!

தாய்மையின் பிரசவம்
மண்ணறையின் இருளினை 
காண்பித்துக் கொண்டிருக்கிறது. !

பிஞ்சுக்கால்கள் உதைக்கும் போதே 
சுவாசமாய் வருகின்றது மூச்சு !

அன்பு நெஞ்சில் 
சிறு துளி பாசம் உரசும் போதே 
பற்றினை வடிக்கும் 
வியர்வை துளி வடிந்து 
உடம்பை கழுவிக் கொண்டிருக்கிறது. !

தொப்புள் கொடி உறவுகளென்று 
ஒட்டிக் கொள்வதற்குள் 
அடம்பன் கொடியாய் சிக்கிக் கொள்கின்றது 
வாழ்க்கை !

அன்னை ஆயிஷா நாயகியும் 
அன்னை பாத்திமா நாயகியும் தந்த 
அழகிய வாழ்க்கை வரலாற்றினைக் கூட ,
பொத்தி பிடிக்க முடியாமல் 
காற்றில் பறக்கும் தூசுகளாக்கி விடுவதா ?

தென்றல் தடவும் 
ஒரு சுகந்தமான உள்ளத்து உணர்வில் 
வாசம் நுகர்ந்து 
உயிர் சுவாசித்துக் கொண்டிருக்கிறது.

வாழ்ந்து காட்டுவதை விட ,
வாழ முடியாமல் தவிப்போருக்கு 
திசை காட்டுவதே
நமக்கு வேண்டியகடமையுணர்வு !

இங்கு -
அன்பான அரவணைப்பும் 
ஆழமான பாசமும் . 
நேர்மையான வழி காட்டலும் 
அழகியவாழ்க்கை வரலாறும் 
அதோ 
அல்லாஹ்வினால் படைக்கப்படாமல், இறக்கப்பட்ட, 
அருள் மறை திருமறை( அல் -குர்ஆன் ) 
அழகாய் விபரித்து (விளக்கம்) சொல்லிக் கொண்டிருக்கிறது.!


Loading...