Wednesday, 6 May 2015

உழைப்பாளி



பாவலர்  கருமலைத்தமிழாழன்

 

நெல்குவித்து    வறுமையினை    ஓட்டு    கின்ற

          நிறையுழைப்பு    உழவரினைப்    போற்று   வோமே

கல்மண்ணைச்    சுமந்துபெருங்     கட்ட   டங்கள்

          கட்டும்தொழி     லாளரினைப்     போற்று    வோமே

நல்வளத்தைத்     தொழிற்சாலை     தனிலு    ழைத்து

          நல்குகின்ற     தோழரினைப்    போற்று    வோமே

வெல்கின்ற    அறிவியலில்    நாடு    யர்த்த

          வினையாற்றும்    அறிஞரினைப்    போற்று    வோமே !

 

தலைக்கூடைச்    சுமையோடும்     இடுப்பில்    பெற்ற

          தன்குழந்தை    சுமையோடும்    கீரை    விற்போள்

தலையினிலும்   முதுகினிலும்    மூட்டை   தூக்கித்

          தள்ளுவண்டி   பாரத்தை   இழுக்கும்    கூலி

வலையோடே    உயிர்க்குறுதி    இல்லா   போதும்

          வாரிதியில்    போராடும்    மீன   வர்கள்

விலைமதிப்புத்    தன்னுழைப்புத்    தோழர்   தம்மை

          விரலிணைத்துக்   கைகுவித்து   வணங்கு   வோமே !

 

உடலுழைப்பில்   உழைத்தாலும்   மதியு   ழைப்பில்

          உழைத்தாலும்   உழைக்கின்ற    வர்கத்    தாரின்

உடலுழைப்பை   மதியுழைப்பைச்   சுரண்டு    கின்ற

          உன்மத்தர்   தமைவீழ்த்தி   உழைக்கும்   தோழர்

முடமாகிப்    போகாமல்   வாழ்வில்   நல்ல

          முன்னேற்றம்   காண்பதற்குத்    துணையாய்   நின்று

நடமாடும்    இறையிவர்தாம்    என்றே   நாளும்

          நாம்போற்றி   மதித்தன்பால்    வாழ்த்து   வோமே !

Loading...