இது ஊக்கமென்னும் உரம் போட்டு அவரவர் திறமைகளை வளர்க்கும் போட்டி
இந்த ஜூன் மாதப் போட்டிக்கும் எந்த வித தலைப்பும் இம்முறையும் நாம் தரவில்லை
எனவே தாங்கள் விரும்பிய தலைப்பில் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்
போட்டி விதிகள்…
...........................
எந்த வகைக் கவிதையானாலும் அதிக வரிகள் இல்லாமல் வரிக்கட்டுப்பாடுகளுடன் எழுதிக் கொள்வது நல்லது
...........................
எந்த வகைக் கவிதையானாலும் அதிக வரிகள் இல்லாமல் வரிக்கட்டுப்பாடுகளுடன் எழுதிக் கொள்வது நல்லது
ஒருவர், ஒரு கவிதை மட்டுமே அனுப்ப வேண்டும்.
.............................. .............................. .............................. .............................. ...
கவிதைகளை நேரடியாக இந்த மின்னஞ்சல் முகவரிக்கு மட்டுமே
அனுப்ப வேண்டும்.வேறு எதற்கும் அனுப்பக் கூடாது
.............................. .............................. .............................. .............
..............................
போட்டியில் பங்கு பற்றுவோர்,தங்களின் இயற் பெயருடன்,
புனைப் பெயர்,
முழுவிலாசம்,
கைபேசி, அல்லது தொலைபேசி,எண்கள்
உட்பட தமது சொந்த புகைப் படத்தையும்
,தன்னைப்பற்றிய சிறு குறிப்பு இவையாவும்
விபரமாக கவிதையுடன் இணைத்து அனுப்ப வேண்டும்
புனித ரமலானை முன்னிட்டு தடாகம் கவிதைப் போட்டியில் வெற்றி அடை வோருக்கு
முதல் பரிசு 25,000/=
இரண்டாம் பரிசு 15,000/=
மூன்றாம் பரிசு 10,000/=பணமும்
(தடாகத்தின் ஆலோசகர்) தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் அல் -ஹஜ் மொஹிடீன் பாவா அவர்களால் வழங்கப்படவுள்ளது
தேர்ந்தெடுக்கப்படும் முதல் கவிதைக்கு"கவியருவி பட்டமும்,சான்றிதழும்"
இரண்டாவது ,தேர்ந்தெடுக்கப்படும் கவிதைக்கு "கவித்தீபம் பட்டமும் ,சான்றிதழும்
மூன்றாவது ,தேர்ந்தெடுக்கப்படும் கவிதைக்கு "கவிச்சுடர்" பட்டமும் ,சான்றிதழும்
இம் மாதத்தின் சிறந்த கவிதைக்கு "கலையூற்று" பட்டமும் ,சான்றிதழும் கொடுக்கப்படவுள்ளது
கவிதைகள் அவரவர் சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும் ,
அத்தோடு உறுதிப் படுத்தல் வேண்டும்(எதிலுமே வெளிவராத படைப்பாக இருக்கவும் வேண்டும
எங்களது பணி! அற்புதமான பணி!!
மாறுபட்ட கோணங்களில் , சம காலத்தைபற்றி சிந்தியுங்கள் அருமையான கவிதைகளை எழுதுங்கள்
இங்கு போட்டியில் பங்கு பற்றும் கவியுள்ளங்கள் என் கலைத்தாயின் பிள்ளைகள் அதனால் யாரையும் ,எக் காரணம் கொண்டும் நாம் பிரித்துப் பார்க்கமாட்டோம் அவர்களது வளர்ச்சிக்குப் பின்னும் ,முன்னும் துணையாய் இருக்கின்றோம்
சிந்தணைத் துளிகள் கொட்டும் போது கவிதை பிறக்கிறது.
அது தடாகத்தின் வரம் என்று மகிழ்ச்சி பெறுங்கள்
பொது தளத்தில் நாகரீகமாக நடந்து கொள்ளுங்கள் ,
போட்டியில் வெற்றி பெற்றவர்களும் இங்கு கவிதைகளை அனுப்புவதன் மூலம் மன நிறைவு பெறுகின்றார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்
தேவையற்ற விடயங்களை நாம்தவிர்த்துக் கொள்கின்றோம்
தடாகத்தில் தாமரைகள் இன்னும் இன்னுமாய் பூத்துக் கொண்டே இருப்பது கண்டு மனம் மகிழ்ச்சியோடு நுகர்கின்றது
இப்போட்டியில் நிர்வாகக் குழுவின் முடிவே இறுதியானது
இம் மாதம் ( ஜூன் ) 25ம் திகதி கவிதைகள் எமக்கு வந்து சேர வேண்டும்
நிபந்தனைக்கு உட்படாத கவிதைகள் நிராகரிக்கப் படும்
நன்றி
கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
அமைப்பாளார்
அமைப்பாளார்
தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு

