Sunday, 31 May 2015

ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்காவிட்டால் இரத்தகளரி - சந்திரிக்கா

சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டிருக்காவிலட்டால், ஒரு வருடத்துக்குள் சிறிலங்கா இரத்தக் களரியாக மாறி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற சுதந்திர கட்சியின் உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

 ஜனவரியில் ஏற்பட்ட ஆட்சிமாற்றமே சிறிலங்காவை பாதுகாத்துள்ளது.

இல்லையெனில் மகிந்தவை எதிர்த்தவர்கள் அனைவரும் கொலை செய்யப்பட்டிருக்கும் நிலை உருவாகி இருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Loading...