வலம்புரி கவிதா வட்டத்தின் 17வது பௌர்ணமி கவியரங்கு நவாலியூர் சோமசுந்தரப்புலவர் அரங்காக எதிர்வரும் 01.07.2015 அன்று
புதன் காலை 10.00
மணிக்கு கொழும்பு-12. குணசிங்கபுர அல் ஹிக்மா கல்லூரியில் கவிஞர் கிண்ணியா அமீர் அலி தலைமையில்
நடைபெறும்.
இக்கவியரங்கில் கொழும்புத் தமிழ்ச் சங்க இலக்கியக் குழுச் செயலாளர் திரு ஆ.இரகுபதி பால ஸ்ரீதரன் சிறப்பதிதியாக கலந்துக் கொண்டு தங்கத்தாத்தா நவாலியூர் சோமசுந்தரப் புலவர் அவர்களைப் பற்றி சிறப்புரை ஆற்றுவார் என வகவத் தலைவர் என் நஜ்முல் ஹுசைன், செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
