மகிந்தவின் மகன் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விசாரணைகளுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தடையாக இருப்பதாக கூறப்படுகிறது.
அவர் எதிர்கட்சித் தலைவராக இருந்த காலப்பகுதியில் நாமலின் ஊழல்கள் குறித்து பல்வேறு முறைபாடுகளை தெரிவித்திருந்தார்.
அவருக்கு எதிரான ஆதாரங்களை கொண்ட கோவைகள் குறித்தும் ரணில் தகவல் வெளியிட்டிருந்தார்.
எனினும் தற்போது அவர் இந்த விசாரணைகளுக்கு முட்டுக்கட்டமையாக இருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
