Wednesday, 3 June 2015

சரித்திரம் படைக்க துடிப்பவன்டா


அந்த முள்ளி வாய்க்கால்தான்

என் பெற்றோர்களுக்கு கொள்ளி
வைத்தது

அன்று ஈழத்து அகதிமுகாம்கள் கூட 
எங்களை தள்ளி வைத்தது
என் பள்ளி படிப்புக்கு அன்றுதான்
முற்று புள்ளி வைக்கப்பட்டது

உறவுகள் இல்லாது ஒதுக்கப்பட்டவன்
தேர்வு இல்லாமலே தெருவுக்கு வந்தவன்

தேர் இழுக்கும் மாந்தர்கள் மத்தியில் 
பொதி சுமக்கும் கழுதையானேன்

ஒரு கூலிக்கு பிறந்தவன்தான்
அதற்காக கூனிக் குறுகி
கேள்விக் குறியாக வாழ முடியுமா?

அநியாயத்தை தட்டிக் கேட்பேன்
தனித்து நின்றாலும் எதிர்த்து நிற்பேன்

சமூகத்தை கூறு போட நினைத்தால்-அவனைச் சந்தியில் வைத்து  
சந்து கிழிப்பேன்டா

அழுக்கன்தான்டா நான்
அநீதிகளைக் கண்டால்
வெடி குண்டா வெடிப்பேன்டா

என்னை சுட்டிப் 
பையன் என்று சொல்லாதே 
சுட்டுப் போடுவேன்
கிட்ட வந்து நெருங்காதே
வகுந்து போடுவேன்

ஊரில் உள்ள
நாதாரி, காவாலிகளுக்கெல்லாம்
இனி நான்தான்டா கோடாரி

சாக்கடையில்தான் நான் சங்கமித்தாலும்
சமுத்திரத்தில் நான் குளித்தவன்டா
சரித்திரம் படைக்க துடிப்பவன்டா

பேய் பிடித்து ஆடுதடா உலகம்
ஒரு புரட்சியில்லாது அடங்குமா
கலகம்


றியாஸ் முஹமட்
Loading...