கிழக்கு நேபாளத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவின் மீட்புப்பணிகள் அங்கு பெய்துவரும் கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலச்சரிவில் குறைந்தது 24 பேர் இறந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
டேப்பில்ஜங் மாவட்டத்தில், நிலச்சரிவினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஆறு கிராமங்களில் பலபேருடைய நிலை என்னவென்று இன்னமும் தெரியவில்லை.
அந்தப்பகுதியின் மலைப்பாங்கான நிலவியல் அமைப்பு காரணமாக அங்கே மீட்புப்பணியாளர்கள் சென்று சேர்வது கடினமானதாக இருக்கிறது.
கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நேபாளத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சுமார் 9000 பேர் பலியானார்கள். அதன் மோசமான பாதிப்புகளில் இருந்து அந்நாடு இன்னமும் முழுமையாக மீளாத நிலையில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
