Tuesday, 9 June 2015

முஸ்லிம் காங்கிரசினால் முஸ்லிம்களுக்கு அழிவு ஏற்படுமா ?

image
ஜனாதிபதியின் நிலைப்பாட்டை கோருகிறார் உதய கம்மன்பில
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் அம்­பாறை கரை­யோர மாவட்டக் கோரிக்கை மூலம் கிழக்கில் ‘நஸி­ரிஸ்தான்’ என்ற பெயரில் தனி முஸ்லிம் நாடொன்று விரைவில் உரு­வாகும் நிலை ஏற்­பட்­டுள்­ளது.அதனால் முஸ்லிம் காங்­கி­ரஸின் கரை­யோர மாவட்ட தனி­நாடு கோரிக்­கைக்­கான பதிலை ஜனா­தி­பதி உட­ன­டி­யாக வெளி­யிட வேண்டும் என பிவி­துரு ஹெல உறு­மய கட்சி வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.
நேற்றுக் காலை கொழும்பு அபே­ராம விகா­ரையில் நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில் பிவி­துரு ஹெல உறு­ம­யவின் தலை­வரும் மேல்­மா­காண சபை உறுப்­பி­ன­ரு­மான உதய கம்­மன்­பில மேற்­கண்ட வேண்­டு­கோளை விடுத்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து வெளி­யி­டு­கையில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தவி­சாளர் பஷீர் சேகுதாவூத் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைத்­துள்ளார். அக்­க­டி­தத்தில் கிழக்கில் வாழும் முஸ்­லிம்­க­ளுக்­கென்று தனி­யான நிர்­வாகம் கொண்ட கரை­யோர மாவட்ட மொன்­றினை ஒதுக்­கித்­த­ரு­மாறு கோரி­யுள்ளார்.
இது முஸ்­லிம்­க­ளுக்­கான தனி­நாடு கோரிக்­கை­யாகும். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முஸ்­லிம்­க­ளுக்கு தனி­நாடு வழங்­கப்­போ­கி­றாரா? இல்­லையா? என்­பதை நாட்டு மக்­க­ளுக்குத் தெளிவு படுத்த வேண்டும்.கடந்த மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சிக்­கா­லத்­திலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வ­ரினால் அப்­போ­தைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ விடம் இந்த கரை­யோர மாவட்ட கோரிக்கை ரவூப் ஹக்­கீ­மினால் முன்­வைக்­கப்­பட்­டது.
ஜனா­தி­பதித் தேர்­தலில் மஹிந்த ராஜபக் ஷவை ஆத­ரிப்­ப­தற்­காக இந்த கரை­யோர மாவட்ட கோரிக்கை பேரம் பேசப்­பட்­டது. ஆனால் மஹிந்த ராஜபக் ஷ இந்தக் கோரிக்­கையை ஏற்­றுக்­கொள்­ள­வில்லை நிரா­க­ரித்து விட்டார்.இத­னை­ய­டுத்து முஸ்லிம் காங்­கிரஸ் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு ஆத­ரவு வழங்­கி­யது. மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யா­னதும் மீண்டும் அதே கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.
இதற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன என்ன சொல்­கிறார்? கரை­யோர மாவட்டம் எனும் முஸ்லிம் தனி­நாட்டை வழங்­கப்­போ­கி­றாரா என்­பது பற்றி நாட்டு மக்­க­ளுக்கு விளக்­க­ம­ளிக்க வேண்டும்.உஸ்­பெஸ்­கிஸ்தான், கிர்­கிஸ்தான் என்று முஸ்லிம் நாடுகள் இருப்­பது போல் இலங்­கையில் நஸி­ரிஸ்தான் என்று முஸ்லிம் நாடு கிழக்கில் உரு­வாகும் அபாய நிலை ஏற்­பட்­டுள்­ளது. இது தொடர்பில் நாம் அவ­தா­ன­மாக இருக்­க­வேண்டும்.
வில்­பத்­துவில் நினைத்த படி­யெல்லாம் காடுகள் அழிக்­கப்­பட்­டுள்­ளன.இந்­நாட்டில் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கும் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு என்று தனியான சட்டங்கள் இல்லை.
இலங்கைக்கு பொதுவான சட்டமொன்றே அமுலிலுள்ளது. என்பதையும் அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றார்.
Loading...