Thursday, 16 July 2015

பிச்சைக்காரர் வங்கிக் கணக்கில் 10 கோடி


பிச்சைக்காரர் வங்கிக் கணக்கில் 10 கோடி
குவைத் ஜூலை 16- குவைத் வங்கியில் பிச்சைக்காரர் ஒருவருக்கு சுமார் 10 கோடி பணம் உள்ளது. குவைத் ,கத்தார், சவூதி அரபியா போன்ற நாடுகளில் பிச்சை எடுக்க னுமதி கிடையாது.
இதனிடையே, குவைத்தில் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுப்பட்டிருந்த போது,பிச்சைக்காரர் ஒருவர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்.அவரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.விசாரணையில் அந்தப் பிச்சைக்காரர் அங்குள்ள வங்கியில் 10 கோடி ரூபாய் போட்டு வைத்திருப்பது தெரிய வந்தது.
பொதுமக்களை ஏமாற்றியதற்காக பிச்சைக்காரர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.மேலும்,கைதான பிச்சைக்காரர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனிடையே, குவைத்தில் அதிகமான பிச்சைக்காரர்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். கடந்த மாதத்தில் மட்டும் 22 வெளிநாட்டு பிச்சைக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களில் பெரும்பாலானவர்கள் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது அதிர்ச்சி அளிக்கிறது.
Loading...
  • அர­சி­ய­ல­மைப்பின் 20ஆவது திருத்தச் சட்­ட­மாக கொண்­டு­வ­ர மலையக தலைவர்கள் மிரட்டப்படுகின்றனர்14.06.2015 - Comments Disabled
  • After Islamic Fundamentalism?16.01.2016 - Comments Disabled
  • State Terror In Sri Lanka: Why Did The Future President Go To A Coconut Estate?14.07.2015 - Comments Disabled
  • 6 மாதங்களுக்குள் வீடு கட்ட நிலங்கள் முகாம் மக்களுக்கு வழங்குவேன் : ஜனாதிபதி உறுதி04.01.2016 - Comments Disabled
  • It’s Morning In Sri Lanka25.12.2015 - Comments Disabled