Tuesday, 14 July 2015

ஒருசிலரின் வெளியேற்றத்தால் கட்சிக்கு எந்தப் பாதிப்புமில்லை”


Board the ElephantS. W. R. D.uunp
ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் இருந்து ஒரு­சிலர் வெளி­யே­றினர் என்பதற்காக கட்­சிக்குள் பிளவு ஏற்­ப­டப்­போ­வ­தில்லை. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ ஆ­கியோர் எம்­முடன் இருப்­பது எமக்கு பெரிய பலம் என ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பொதுச் செய­லாளர்

சுசில் பிரே­ம­ஜெ­யந்த தெரி­வித்தார்.
ரணிலை காப்­பாற்ற ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­ணியில் இருந்து வெளி­யே­றிய உறுப்­பி­னர்கள் மக்கள் செல்­வாக்கு இல்­லா­த­வர்கள். ரணிலை காப்­பாற்­றிய தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு, ஜே.வி.பி இன்று அவ­ருடன் இல்லை. இப்­போது இவர்­களின் நிலைமை பரி­தா­ப­க­ர­மாக மாறி­விட்­டது எனவும் அவர் குறிப்­பிட்டார்.
எதிர்க்­கட்சி அலுவலகத்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் அங்கு மேலும் கூறு­கையில்,
மக்களின் வேண்­டு­கோ­ளுக்கு இணங்க ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் மஹிந்த ராஜபக் ஷவை நாம் கள­மி­றக்­கி­யுள்ளோம். குரு­நாகல் மாவட்­டத்தில் மஹிந்­தவை கள­மி­றக்கி நாம் பல­மான கட்­சி­யாக மீண்டும் உரு­வெ­டுப்போம் என்ற நம்­பிக்கை எமக்கு உள்­ளது. உண்­மை­யான ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­ணியை நாம் இறுதி நேரத்தில் உரு­வாக்­கி­யுள்ளோம். இம்­முறை எம்­முடன் கூட்­ட­ணியில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­மையில் இட­து­சாரிக் கட்­சிகள் மற்றும் 27 அமைப்­புகள் ஒன்­றி­ணைத்து போட்­டி­யி­டு­கின்­றன. அதேபோல் சகல மாவட்­டங்­க­ளிலும் நாம் பல­மான வேட்­பா­ளர்­களை கள­மி­றக்கி ஏனைய கட்­சி­க­ளுக்கு சவா­லான கட்­சி­யாக உரு­வாக்­கி­யுள்ளோம்.
மேலும் கடந்த ஜனா­தி­பதி தேர்­தலின் பின்னர் எமது கட்­சிக்குள் ஒரு­சிலர் மாற்றுக் கொள்­கையில் செயற்­பட்­டனர். கட்­சியை பிள­வு­ப­டுத்த இவர்கள் முயற்­சித்து வந்­தனர். அவ்­வா­றான நிலையில் இப்­போது கட்­சியில் இருந்து ஒரு சிலர் வெளி­யே­றி­விட்­டனர். இவர்கள் வெளி­யே­றி­ய­தனால் கட்­சியில் பிளவு ஏற்­பட்­டுள்­ளது என்று குறிப்­பிட முடி­யாது.
அதேபோல் இவர்கள் கட்­சியில் இருந்து வெளி­யே­று­வது அவர்­க­ளது தனிப்­பட்ட விருப்­ப­மாகும். அதைப்­பற்றி நாம் எதையும் விமர்­சிக்க முடி­யாது. அதேபோல் இவர்கள் கட்­சியை விட்டு வெளி­யே­றி­ய­தனால் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­ணிக்குள் எந்­த­வித பாதிப்பும் ஏற்­படப் போவ­தில்லை. ஐக்­கிய மக்கள் சுதந்­தரக் கூட்­ட­ணியில் இருந்து வெளி­யேறி இன்று ஐக்­கிய தேசியக் கட்­சி­யோடு இணைந்தி­ருக்கும் இவர்­க­ளுக்கு மக்கள் செல்­வாக்கு இல்லை.
கடந்த ஜனா­தி­பதி தேர்­தலின் போதும் இவர்கள் எம்­முடன் இருக்­க­வில்லை. அப்­போது பொது எதி­ர­ணியை வெற்­றி­பெறச் செய்து ஆட்­சியை ஐக்­கிய தேசியக் கட்சி கைப்­பற்ற முக்­கிய பங்­கினை தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பும், மக்கள் விடு­தலை முன்­ன­ணியும், ஜன­நா­யகக் கட்­சி­யுமே செய்­தன. ஆனால் இன்று இவர்கள் மூவ­ருமே எதி­ர­ணியில் இல்லை. ஆகவே இங்­கி­ருந்து வெளி­யே­றிய உறுப்­பி­னர்­க­ளுக்கு மக்கள் செல்­வாக்கும் இல்லை, அவர்­களை காப்­பாற்ற கூட்­ட­மைப்பு, மக்கள் விடு­தலை முன்­ன­ணி என்பன தற்போது இல்லை. இப்­போது இவர்கள் என்ன செய்யப் போகின்­றனர். கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலைப் போல் இந்த பொதுத் தேர்­தலை கருத முடி­யாது.
ஜனா­தி­பதி தேர்­தலின் போது தெற்கில் நாம் பெரும்­பான்மை ஆத­ரவை பெற்றோம். ஒரு சில மாவட்­டங்­களில் எமது வாக்­கு­வீதம் குறை­வ­டைந்­தி­ருந்­தாலும் நாம் முழு­மை­யான சிங்­கள வாக்­கு­களை பெற்­றி­ருந்தோம். அதேபோல் நான்கு மாவட்­டங்­களில் நாம் நான்­கா­யிரம் வாக்­குகள் வித்­தி­யா­சத்தில் தோல்­வியை தழு­வி­யி­ருந்தோம். வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணங்­களில் எம்மால் வெற்றியை எண்ணிப்பார்க்க முடியாது. அங்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றியை தனதாக்கும். ஆகவே இம்முறை ஜனாதிபதி எம்முடன் இருக்கின்றார். முன்னாள் ஜனாதிபதி களத்தில் இறங்கி போட்டியிடுகின்றார். இதுவே எமக்கு பெரிய பலமாகும். எனவே இந்த பலத்துடன் எம்மால் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முடியும் என்றார்.
Loading...