இயற்கையே இதற்கு காரணம்
பெண்களின் உடலமைப்பில் பிள்ளை பேற்றிற்காக இடுப்பு பகுதியின் கீழ்பகுதி என்புகள் அற்று தசை மட்டுமே இருக்கும். இப் பகுதியினூடகவே பிள்ளை சாதாரணமாகப் பிறக்கும்விதமாக அமைக்கப்பட்டிருக்கும்.
பல பிள்ளைகளை பெறும் போது இத் தசை நார்கள் தமது வலிமையை இழக்கும். இதனால் கர்ப்பப்பையை வழமைபோல் தாங்கி வைத்திருக்க முடியாமல் இருக்கும். இதன் விளைவாக கர்ப்பப்பை இறக்கம் ஏற்படும்.
பிள்ளை பெற்ற பின் சரியான உடற் பயிற்சியை முறையான வழிகாட்டலின் கீழ் செய்தால் இவ்வகை குடல் இறக்கம் ஏற்படுவதை தடுக்கலாம்.
என்ன அறிகுறிகள் ஏற்படலாம்?
பிறப்பு வாசலில் ஒரு கட்டி எப்போதும் வெளித்தெரியலாம். சிலருக்கு இருமும் போது ஒரு கட்டி மட்டும் வெளித்தெரியலாம்.
சிலவேளைகளில் நாரிவலி அல்லது முதுகு வலி இருக்கலாம்.
சிறுநீர் சம்பந்தமான அறிகுறிகளும் சிலருக்கு இருக்கலாம். உதாரணமாக இருமும் அல்லது தும்மும் போது சிறு நீர் போகலாம். சிலருக்கு அவர்களை அறியாமல் கட்டுப்பாடின்றி சிறு நீர் போகலாம்.
மேலும் சிலர் மலச்சிக்கல் அல்லது மலம் கழிக்க முடியாமல் அவதிப்படலாம்.
எவ்வகை சிகிச்சைகள் உள்ளன?
இவ்வகை அறிகுறி இருப்பவர்கள் கவலைப்பட வேண்டாம்.
இவர்களுக்கு உள்ள பிரைச்சினையை சரியாக அறிந்தால் அதற்கு உரிய சிகிச்சையை பெற்றுக்கொள்ளலாம்.
குறிப்பிட வகையான உடல் பயிற்சிகளை (pelvic floor exercise) செய்வதன் மூலம் சிலருக்கு நோய் அறிகுறிகளை சரி செய்ய முடியும் சிலருக்கு ஒரு வித வளையம்(pessary) ஒன்றை வைப்பதன் மூலம் தீர்வை பெறலாம். சத்திர சிகிச்சை(Surgery) சிலருக்கு தேவைப்படலாம்.
நோயாளியின் நோய் அறிகுறிகள் இஎவ்வகை குடல் இறக்கம் மற்றும் நோயாளிக்கு உள்ள வேறு மருத்துவ பிரைச்சினைகள் என்பவற்றை பொறுத்து சிகிச்சை மாறலாம்.
மிக சிறிய அல்லது ஆரம்ப நிலையில் உள்ள குடல் இறக்கம் எனில் உரிய அளவுக்குரிய வளையம்(pessary) ஒன்றை கர்ப்பப்பை வாசல் அருகே வைப்பதன் மூலம் அவர்களின் சிரமங்களை குறைக்கலாம். இவ் வளையம் 6 மாதத்துக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.
பெரிய அல்லது நோயாளியின் நாளந்த வாழ்க்கையை பாதிக்கும் குடல் இறக்கம் எனில் சத்திர சிகிச்சை (vaginal hysterectomy) மூலமே இதற்கு தீர்வு காணவேண்டும்.
இவ்வகை சத்திரசிகிச்சை செய்தபின் ஓர் குறிப்பிட்ட காலத்துக்கு(இரண்டு மாதங்கள்) மிக கடின வேலைகளை தவிர்த்தல் வேண்டும்.
மேலும் சிலருக்கு இவ்வகை சத்திர சிகிச்சை செய்தபின்னும் பலவருடங்களின் பின் குடல் இறக்கம் மீளவும் ஏற்படக்கூடும் .
DR. கந்தையா குருபரன்
பெண் நோயியல் மகப்பேற்றியல் நிபுணர்:
சிரேஷ்ட விரிவுரையாளர்
இமருத்துவ பீடம்: யாழ் போதனா வைத்தியசாலை