நாடாளுமன்ற தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிடவுள்ள பிரதான கட்சிகள் நாளை வேட்புமனுத்தாக்கல் செய்யவுள்ள நிலையில் பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு ஏ- 9 வீதியைத் தவிர்த்து மாற்று போக்குவரத்தினை மேற்கொள்ளுமாறு யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யு.கே. வூட்லர் தெரிவித்தார்.
யாழ்ப்பாண ஊடகவியலாளர்களுக்கும் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யு.கே. வூட்லருக்கும் இடையில் இன்று மாலை சந்திப்பொன்று இடம்பெற்றது. அதன்போதே இந்த அறிவித்தலை விடுத்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாளை வேட்புமனு தாக்கல் செய்யப்படுவதால் ஏ-9 வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக் கூடும். அத்துடன் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே பயணிகளது நன்மை கருதி நாளையதினம் காலை 8.30 மணிமுதல் மாலை வரை மாவட்ட செயலக வீதியைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடமும் பயணிகள் மற்றும் வாகன சாரதிகளிடமும் கேட்டுக் கொள்கின்றேன்.
அதற்கமைய யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிச் செல்லும் பயணிகள் மற்றும் வாகன சாரதிகள் யாழ்ப்பாணத்திலிருந்து ஏ-9 வீதி வழியாக வந்து பழைய பூங்கா வீதியால் வலப்பக்கம் திரும்பி சுண்டுக்குழி சந்தியை அடைந்து அங்கிருந்து கொழும்புத்துறை வழியாக சென்று மாம்பழம் சந்தியினை அடையமுடியும் அங்கிருந்து ஏ-9 வீதி வழியாக பயணிக்கலாம்.
அதேபோல வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் வரும் பயணிகளும் வாகன சாரதிகளும் புங்கன்குளம் வீதியால் வந்து வலப்பக்கமாக திரும்பி கொழும்புத்துறை வழியாக பஸ்ரியன் சந்தியை வந்தடைந்து மீண்டும் ஏ-9 வழியாக யாழ்ப்பாணத்தை வந்தடைய முடியும்.
எனவே பயணிக்கும் அனைவரும் போக்குவரத்து நடைமுறைகளை கவனத்தில் கொண்டு எமக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
|
Friday, 10 July 2015
![]() |
பிரதான கட்சிகள் வேட்புமனு; போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நாளையதினம் மாற்றுப்பாதைகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை |
Loading...
