கல்முனை நகர் மத்தியில் அமைந்துள்ள தனியார் பஸ் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள பொதுச் சந்தைக்கு செல்லும் பாதையினை இரவோடு இரவாக முதலியார் காரியப்பர் வீதி என பெயரிடப் பட்டதை எதிர்த்து பொலீசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது




தேர்தலில் வாக்கு பெரும் நோக்கில் தேர்தல் காலங்களில் இவ்வாறு செய்வது தேர்தல் விதிமுறைகளை மீறும் செயல் என்றும் இதன் காரணமாக இனம்களுக்கிடையே இன முரண்பாடுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு என்றும் தெரிவித்த ஹென்றி மகேந்திரன் இதில் ஏற்கனவே பாதை ஒன்று இருக்கவில்லை என்றும் புதிதாக பாதை ஒன்று உருவாக்கப்பட்டு பெயரிடப்பட்டமையானது வன்மையாக கண்டிக்கபடவெண்டிய் விடயம் என்றும் தெரிவித்ததுடன் மாநகர சபையின் அனுமதியோ மக்களது அங்கீகாரமோ இன்றி இதனை மேற்கொண்டுள்ளதினால் இது சட்டத்திற்கு முரணானது எனவும் தெரிவித்தார் .
