|
நாட்டின் தென்மேல் பிரதேசங்களில் இன்று (26) அதிக காற்றுடன் மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகிறது எனவும் பெய்யும் மழை வீழ்ச்சியினளவு மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மாகாணங்களிலும் காலி மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுகிறது என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் பெரும்பாலான பிரதேசங்களில் தற்போது நிலவுகின்ற காலநிலையே தொடரலாம் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது. அத்துடன் ஊவா கிழக்கு மாகாணங்களில் மாலை வேளையில் குறிப்பாக 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய நேரத்தில் மின்னல் அபாயங்களும் ஏற்படக்கூடுமெனவும் அதனால் பொதுமக்கள் அனைவரையும் மிகவும் அவதானத்துடன் இருக்கும் படி வானிலை அவதான நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.
பிரதான நகரங்களின் காலநிலை நாட்டின் வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இரவில் அதிகளவிலான இடி முழக்கங்கள் ஏற்படக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து பிரதேசங்களிலும் மாலையில் அல்லது இரவில் மழைக்கான சாத்தியம் அதிகளவில் காணப்படுகிறது. அநுராதபுர மாவட்டத்தில் வெப்ப நிலையானது ஆகக்கூடியது 34 செல்சியஸ் பாகையாகவும் ஆகக் குறைவான வெப்பநிலை 24 செல்சியஸ் பாகையாகவும் காணப்படுவதோடு பிற்பகல் 02 மணிக்கு பின்னர் மழைக்கான சாத்தியம் காணப்படுகிறது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆகக்கூடியது 34 செல்சியஸ் பாகையாகவும் ஆகக் குறைவான வெப்பநிலை 26 செல்சியஸ் பாகையாகவும் காணப்படும் அதேவேளை யாழ்ப்பாணம் மன்னார் ஆகிய பிரதேசங்களில் மிதமான காலநிலை காணப்படலாம். மட்டக்களப்பில் ஆகக்கூடுதலான வெப்பநிலையாக 33 செல்சியஸ் பாகையாகவும் ஆகக் குறைவான வெப்பநிலை 25 செல்சியஸ் பாகையாகவும் காணப்படும் அதேவேளை பிற்பகல் 02 மணிக்கு பின்னர் மழைக்கான சாத்தியம் காணப்படலாம்.
கொழும்பு மாவட்டத்தில் ஆகக்கூடுதலான வெப்பநிலை 30 செல்சியஸ் பாகையாகவும் ஆகக் குறைவான வெப்பநிலை 25 செல்சியஸ் பாகையாகவும் காணப்படுவதோடு காலையில் மழைக்கான காலநிலை காணப்படலாம். கண்டி நுவரெலியா இரத்தினபுரி கொழும்பு காலி மாவட்டங்களில் சிறிதளவிலான மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டில் ஆகக்கூடிய வெப்பநிலையாக திருகோணமலை 36.7 செல்சியஸ் பாகையும் குறைந்தளவு வெப்பநிலையாக நுவரெலியா மாவட்டத்தில் 11.8 செல்சியஸ் பாகையும் காணப்படுகிறது. ஆகக்கூடியளவு மழைவீழ்ச்சி பதிவாகிய பிரதேசம் நாட்டில் ஆகக்கூடியளவு மழைவீழ்ச்சியாக நுவரெலியா குருதுஓயா பிரதேசத்தில் 83.0 மில்லி மீற்றர் பதியப்பட்டுள்ளது.
|
Saturday, 26 September 2015
![]() |
தென்மேற்கு பிரதேசங்களில் மழைவீழ்ச்சியினளவு அதிகரிக்கலாம்? |
Loading...
