Wednesday, 16 September 2015

நாட்டைச்சூழவுள்ள கடலோரங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கலாம்?

நாட்டின் புத்தளம் மாத்தறை ஊடாக கொழும்பு காலி வரையான கடலோரங்களிலும் மற்றும் சில பிரதேசங்களிலும் பிற்பகல் 02 மணிக்கு பின்னரான காலப்பகுதியில் இன்று (16) இடியுடன் மழைவீழ்ச்சியினளவு அதிகரிக்கலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் வடமேல் - தென்மேல் கடலோரங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கலாம் எனவும் எதிர்வு கூறியுள்ளது. 

அத்துடன் நாட்டைச்சூழவுள்ள கடலோரங்களிலும் மாலை அல்லது இரவு வேளையில் குறிப்பாக மாலை 04 மணியிலிருந்து 08 மணி வரைக்கும் இடையிலான காலப்பகுதியில் மன்னார், யாழ்ப்பாணம் ஊடாக காங்கேசன்துறை வரையான பிரதேசங்களிலும் இடியுடன் கூடிய சிறிதளவிலான மழை பெய்யலாம் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

தென்மேற்கு கரையோரமாக காற்று வீசுவதற்கான சந்தர்ப்பம் அதிகமாக காணப்படலாம் எனவும் இக்காற்றின் வேகம் மணிக்கு 30 - 40 கிலோமீற்றர் வேகத்தில் வீசலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. சில தருணங்களில் இக்காற்றின் வேகம் மணிக்கு 70 கிலோமீற்றர் அளவில் வீசலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.


Loading...