|
நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு என்பன இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்துள்ளன. இந்த நிலையில் அரசாங்கத்தில் இணையாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே அதிகளவான 16 ஆசனங்களை கொண்ட கட்சியாக விளங்குகிறது.
எனவே அதற்கே எதிர்க்கட்சி தலைவர் பதவியை கொண்டிருக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இரா. சம்பந்தன் நாளை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியவினால் எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்படுவார். ஜெ.வி.பியும் இந்த நிலைப்பாட்டுக்கு ஆதரவை வெளியிட்டுள்ளது.
சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டால் அது 1983ஆம் ஆண்டுக்குப் பின்னர்- குறிப்பாக 32 வருடங்களுக்கு பின் னர் தமிழர் ஒருவர் இலங்கையில் எதிர்க்கட்சி தலைவராக நியமனம் பெறுவார்.
ஏற்கனவே ஐக்கிய தேசி யக் கட்சியின் ஜனாதிபதி ஜெ.ஆர் ஜெயவர்த்தனவின் ஆட்சி யின் போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் 1977ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 1983ஆம் ஆண்டு ஒக்டோபர் 24ஆம் திகதி வரை எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
|
Wednesday, 2 September 2015
![]() |
நாளை எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன் நியமிக்கப்படுவார் ? |
Loading...
