Friday, 20 November 2015

வரவு செலவுத்திட்ட தேநீர் விருந்தைப் புறக்கணித்த மஹிந்த

நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வு நிறைவில் வழங்கப்பட்ட தேநீர் விருந்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச புறக்கணித்துள்ளார்.

வரவு செலவுத்திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் நாட்களில் நிதியமைச்சின் சார்பில் தேநீர் விருந்தொன்று வழங்கப்படுவது வழக்கமாகும். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடின்றி இந்த தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுக்கப்படும்.

இந்த வழக்கத்தின் பிரகாரம் இன்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த தேநீர் விருந்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர்
விமல் வீரவன்ச ஆகியோர் இதனைப் புறக்கணித்துள்ளனர்.எதிர்க்கட்சிகளின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியமைச்சின் தேநீர் விருந்தில் கலந்து கொண்டிருந்தனர்.
Loading...