Wednesday, 4 November 2015

முகப்பொலிவை அதிகரிக்கும் பழங்களின் தோல்கள்

பல இளம் பெண்கள் தங்களின் முகச்சருமம் பாதிப்பிற்குள்ளாகக் கூடாது என்று  அழகு நிலையங்களுக்குச் சென்று தங்களின் முகத்திற்கு பல்வேறு பராமரிப்புக்களை மேற்கொள்கிறார்கள். இப்படி எப்போது பார்த்தாலும் கெமிக்கல் கலந்த பொருட்களைக் கொண்டு சருமத்திற்குப் பராமரிப்பு கொடுத்தால், சரும செல்கள் விரைவில் அழிந்து, முகம் பொலிவிழந்து அசிங்கமாகிவிடும்.
எனவே நாம் பயன்படுத்தும் சில சமையலறைப் பொருட்கள் அல்லது நாம் சாப்பிடும் சில பழங்களின் தோல்களைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சரும ஆரோக்கியம் மேம்படுவதோடு, சருமமும் பொலிவோடு பிரச்சனையின்றி இருக்கும்.
முகப்பொலிவை அதிகரிக்கும் பழங்களின் தோல்கள்!!!
orange-2
ஆரஞ்சு தோல் : ஆரஞ்சு பழத்தின் தோலில் வளமான அளவில் விட்டமின் சி மற்றும் ஏ நிறைந்துள்ளது. இவை சருமத்தின் ஆரோக்கியத்திற்கு தேவையானவை. அதில் விட்டமின் சி சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும். விட்டமின் ஏ சருமத்தில் உள்ள சுருக்கங்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றை மறைய வைக்கும். மேலும் முகப்பருவில் இருந்தும் விடுவிக்கும்.


eatingbanana
வாழைப்பழத் தோல்:  வாழைப்பழத்தின் தோலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஏராளமாக நிறைந்துள்ளது. இது சரும செல்களுக்கு ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கும் மற்றும் புற ஊதாக் கதிர்களிடமிருந்து நல்ல பாதுகாப்பு வழங்கும். எனவே இனிமேல் வாழைப்பழத்தின் தோலை தூக்கி எறியாதீர்கள்.

pomegranate....-150x150
மாதுளை தோல்: மாதுளையின் தோலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமாக உள்ளது. இது சருமத்தில் உள்ள சுருக்கங்களை நீங்கி, முதுமைத் தோற்றத்தைத் தடுத்து, சருமத்தின் நிறத்தையும் அதிகரிக்க உதவும்.

lemon-peel
எலுமிச்சை தோல்: எலுமிச்சையின் தோலில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை உள்ளதால், அது சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தையும் வெளியேற்றும். மேலும் இதில் உள்ள சிட்ரிக் ஆசிட், சரும பொலிவை அதிகரிக்கும்.

images
ஆப்பிள் தோல் : ஆப்பிளின் தோலில் பாலிஃபீனால்கள் ஏராளமாக உள்ளதால், அது ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடும் மற்றும் சரும செல்களைப் புதுப்பிக்கும்.

images (1)
பப்பாளி தோல்: பப்பாளியின் தோலில் ஆல்பா ஹைட்ராக்ஸி பொருள் உள்ளது. இது சருமத்தில் உள்ள கருமையைப் போக்க வல்லது. மேலும் இது சருமத்தில் உள்ள இறந்த செல்களையும் நீக்கவல்லது.

Loading...
  • குடிதண்ணீரும் குடாநாடும்21.06.2015 - Comments Disabled
  • துனீசியாவில் மேலும் தாக்குதல்: பிரிட்டன் எச்சரிக்கை28.06.2015 - Comments Disabled
  • மகிந்தவின் பாதுகாப்பை குறைக்குமாறு ஐ.தே.க கோரிக்கை 16.07.2015 - Comments Disabled
  • வடமாகாணத்தில் அதிகரிக்கும் மதுப்பழக்கம்: மைத்திரிபால சிறிசேன கவலை20.06.2015 - Comments Disabled
  • நாடாளுமன்றம் கலையும், ஆனால் இப்போது கலையாது என்றார் ராஜித.26.06.2015 - Comments Disabled