Tuesday, 29 December 2015

இரா­ணு­வத்தின் உத்­தி­யோ­க­பூர்வ இணை­யத்­தளத்தில் ருத்­ர­கு­மாரின் படம் ஊடு­ரு­வப்­பட்டுள்ளது!

இலங்கை இரா­ணு­வத்தின் உத்­தி­யோ­க­பூர்வ இணை­யத்­தளம் அடை­யாளம் தெரி­யாத ஹெக்­கர்­களால் ஊடு­ரு­வப்­பட்டு சுமார் அரை மணி நேரம் அவர்­க­ளது கட்­டுப்­பாட்டில் இருந்­துள்­ளது. இதன் போது புலம்­பெயர் தமிழ் அமைப்பு ஒன்றின் தலை­வ­ராக கரு­தப்­படும் வீ.ருத்­ர­கு­மாரின் புகைப்­படம் அந்த இணை­யத்­த­ளத்தில் பதி­வேற்­றப்­பட்­டுள்­ளது. கடந்த சனி­யன்று இடம்­பெற்­றுள்ள இந்த சம்­பவம் குறித்து இரா­ணுவ மட்­டத்­தி­லான உயர் விசா­ர­ணை­யொன்று ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், இதன் போது தமது இணை­யத்­தளம் எவ்­வாறு ஊடுருவப்பட்டது, இணைய பாது­காப்பு விட­யங்கள் தொடர்பில் கூடிய அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் இரா­ணுவ ஊடகப் பேச்­சாளர் பிரி­கே­டியர் ஜெயநாத் ஜய­வீர தெரி­வித்தார்.

எவ்­வா­றா­யினும் இரா­ணுவ தகவல் தொழில்நுட்ப பிரிவு ஊடு­ருவல் காரர்­களின் பிடியில் இருந்து அரை மணி நேரத்தில் இணை­யத்­த­ளத்தை மீட்­டுள்­ள­துடன் அதில் பதி­வே­ற்றப்­பட்ட ருத்­­ர­கு­மாரின் படம் உள்­ளிட்ட தக­வல்­க­ளையும் நீக்­கி­யுள்­ளது. இத­னை­ய­டுத்து ஊடு­ருவல் காரர்­கள் இரா­ணுவ இணை­யத்­த­ளத்­தினுள் நுழைய பயன்­ப­டுத்­திய இணை­யத்­தள அடை­யாள இலக்கம் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­துடன் அத­னூ­டாக மேல­திக விசார­ணைகள் இடம்­பெ­று­வ­தாக இரா­ணு­வத்தின் உயர் அதி­காரி ஒருவர் சுட்­டிக்­காட்­டினார்.

எவ்­வா­றா­யினும் எதிர்­கா­லத்தில் இரா­ணுவ இணை­யத்­த­ளத்தின் பாது­காப்பு குறித்து கூடுதல் அக்­கறை காட்­டப்­பட்­டுள்­ள­தா­கவும் இதன் பொருட்டு இணைய பாதுகாப்பு குறித்து மேலதிக அவதானம் செலுத்த தேவையான நடவடிக்கைகள் தற் சமயம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜயவீர தெரிவித்தார்.
Loading...