|
கொழும்பில் பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைக்காக ஆஜரான கோதாபாய ராஜபக்ஷ, விசாரணை முடிவடைந்து வெளியே வந்தபோது ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிட்டார்.இன்று பலமான எதிர்க்கட்சி ஒன்று இல்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார். இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணம் சென்று வருவதற்கு போரை தாம் முடித்துவைத்தமைதான் காரணம் எனவும் அவர் தெரிவித்தார்
|
