Saturday, 9 January 2016

அரசாங்கம் பிரிவினைவாதிகளுக்கு பலத்தை வழங்கியுள்ளது

அரசாங்கம் பிரிவினைவாதிகளுக்கு பலத்தை வழங்கியுள்ளது
அரசாங்கம் பிரிவினைவாதிகளுக்கு பலத்தை வழங்கியுள்ளது
நல்லாட்சிக்கான அரசாங்கம் பிரிவினைவாதிகளுக்கு பலத்தை வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் உடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,நல்லாட்சியினர் பிரிவினைவாதத்திற்கு பலத்தை வழங்கியுள்ளனர். சிவாபசுபதி இலங்கைக்கு வருகைதந்து புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் தலையீடு செய்வதற்கான சந்தர்ப்பதை ஏற்படுத்திக்கொடுத்துள்ளார். புலிகளின் சின்னம் உள்ளிட்ட சேட்டை அணிந்து வடக்கில் இருக்க கூடியவாறு சூழல் மாறுபட்டுள்ளது.நாட்டை பாதுகாத்த இராணுவத்தினரை வடக்கில் வடிகாலை சுத்தப்படுத்துமாறு கூறுகின்ற அளவிற்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு பலம் கிடைத்துள்ளது.

பிரிவினைவாதம், இனவாதம் கடும்போக்குவாத குழுக்கள் இந்த வருடத்தில் பலம் பெற்றுள்ளன, சூரூஸ் என்பவர் உலகில் உள்ள நிதி மோசடியாளர். பல நாடுகளின் கறுப்புபட்டியலில் உள்ளடக்கப்பட்ட நிதி மோசடியாளர்.
அவரை சுற்றுலா பயணியாக கூட நாட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம் என மலேசியா அறிவித்துள்ளது. அவர் நாடுகள் பலவற்றை கீழ் நிலைக்கு கொண்டு சென்றவர்.

அத்தோடு,ஐக்கிய நாடுகள் சபையிலுள்ள நிதி மோசடியாளர் இவர். அந்த நிதி மோசடியாளரை தான் இன்று பொருளாதார பின்னடைவை இல்லாது செய்யும் பெரிய தேவ தூதராக நல்லாட்சி அரசாங்கம் நியமித்துள்ளது. இந்த அரசாங்கம் செல்லக் கூடிய பயணம் ஒன்று இல்லை என்பது இதன்மூலமே தெரிகின்றது.

மேலும், பொய்யான விசேட உரைகள் மூலமும் கதைகள் மூலமும் இந்த நாட்டு மக்களை திருப்திப்படுத்துவதன் மூலம் அவர்களின் வயிற்றை நிரப்ப முடியும் என இவர்கள் நினைக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

Loading...