Tuesday, 2 February 2016

15 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகும் அபயராம விகாராதிபதி !!














நாரஹேன்பிட்டி ஸ்ரீ அபயராம விகாரையை அரசியல் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு பயன் படுத்துவதாக குற்றம் சாட்டி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

வழக்கு தொடர்பில், எதிர்வரும் 15 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி, வாக்குமூலம் வழங்குமாறு அபயராம விகாராதிபதி முருத்தொட்டுவே ஆனந்த தேரருக்கு கொழும்பு பிரதான மாவட்ட நீதிபதி ரி.டீ. குணசேகர உத்தரவுப் பத்திரம் அனுப்பியுள்ளார்.

நாரஹேன்பிட்ட ஸ்ரீ அபயாராம கிருலப்பன ஸ்ரீ புர்வாராம விகாரையின் தலைமையில் உபய விகாரையின் விகாராதிபதி பத்பேரியே விமலஞான தேரரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதே நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
Loading...