எதிர்வரும் உள்ளூராச்சி தேர்தல் முடிவுகள் நல்லாட்சிக்கு மக்கள் வழங்கும் ஒரு மதிப்பெண்ணாகவே இருக்கும். அதே போல் வடக்கு , கிழக்குகளில் சிறுபான்மைக் கட்சிகளின் பலப் பரீட்சையாகவே இருக்கும், ஆனால் மக்களின் அபிலாசைகள் எதிர் பார்ப்பாகவே இருக்கும்.
அம்பாறை மாவட்டச் சமூகம் விழிதுள்ளதா ?அல்லது இன்னும் விழிக்கவில்லையா? என்பது நடைபெறவுள்ள முஸ்லிம் காங்கிரசின் பாலமுனை மகா நாட்டின் மக்கள் திரளில்தான் புரியும்.
விழிப்படைந்தவர்கள் மகா நாட்டை நிராகரிப்பர் , விழிப் படையாதோர் பிரசன்னமாவார்கள் .பொறுத்திருங்கள் .
குமுறும் சமூகம் மீண்டும் ஏமாறுவார்களா? இல்லையா ? என்பது புரியும். இவ்வாறு தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா கூறினார்

