Monday, 18 May 2015

ரோஹிஞ்சா முஸ்லீம்களை ஏற்க நாடுகள் தயங்குகின்றன: ஐநா


இந்தோனேஷிய கடலில் மீட்கப்பட்ட ரோஹிஞ்சா முஸ்லீம்கள்

தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளின் கரைகளை நோக்கி கடல்வழியாக வரும் ஆயிரக்கணக்கான ரோஹிஞ்சா குடியேறிகளை, அந்த நாடுகள் ஏற்க வேண்டும் என்று விடுக்கப்பட்ட அழைப்பை, தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய மூன்று நாடுகளும் இன்னமும் ஏற்க மறுப்பதாக, ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
கடலில் தத்தளிக்கும் இவர்களை காப்பாற்றுவதற்கான நேரம் காலாவதியாகிக்கொண்டிருப்பதாக பாங்காக்கில் உள்ள ஐ நாவின் அகதிகளுக்கான நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
கடைசியாக கடந்த வெள்ளிக்கிழமை பல நூற்றுக்கணக்கான குடியேறிகள், படகுகளில் இந்தோனேசியா வந்தடைந்திருந்தனர். ஆனால் கடந்த வெள்ளிக்கிழமைக்குப் பிறகு வேறு எவரும் அங்கே தரையிறங்கியிருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
குடியேறிகளை ஏற்றிவரும் படகுகள், அல்லது படகுப் பயணிகள், கடலில் மூழ்கிக்கொண்டிருந்தால் ஒழிய, படகில் வரும் குடியேறிகளுக்கு உதவக்கூடாது என, இந்தோனேசிய அதிகாரிகள் அந்நாட்டு மீனவர்களுக்கு அறிவித்துள்ளனர்.
மியன்மார் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து, வறுமை மற்றும் துன்புறுத்தல் காரணமாக வெளியேறுபவர்களே, குடியேறும் நோக்கில் இத்தகைய படகுப் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

BBC TAMIL
Loading...
  • சீனாவில் பயங்கர நிலநடுக்கம்; 6 பேர் பலி: பொதுமக்கள் அச்சம்04.07.2015 - Comments Disabled
  • 2 பில்லியன் டொலர்களை கடனாகப்பெற இலங்கை அரசாங்கம் திட்டம் 12.06.2015 - Comments Disabled
  • 'ஃபிப்டி ஷேட்ஸ்' நாவல் பதிப்பாளருக்கு மில்லியன் கணக்கான டாலர்களை வழங்க நீதிமன்றம் உத்தரவு27.08.2015 - Comments Disabled
  • போர்க்குற்ற வலையிலிருந்து தப்பியது இலங்கை?27.08.2015 - Comments Disabled
  • அமெரிக்க அரசாங்க தகவல்களில் நுழைந்த ஹக்கர்கள்05.06.2015 - Comments Disabled