Saturday, 20 June 2015

விழிப்புணர்வற்று இருக்கும் சிறுபான்மை சமூகங்கள்

முனாஸ் சம்சுதீன்
தேர்தல் மறுசீரமைப்பு என்பது தற்போது இருக்கின்ற தேர்தல் முறைமையில் குறைபாடுகளை களைவதற்கான ஏற்பாடாக  இருக்கவேண்டுமே ஒழிய இருக்கின்ற நல்ல அம்சங்களை சீர்குலைத்து மேலும் புதிய சிக்கல்களை தோற்றுவிக்கும் முறைமையாக இருக்கக்கூடாது.
தற்போது அமுலில் உள்ள முறைமையான விகிதாசார பிரதிநிதித்துவம் 1977ம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஐந்தில் நான்கு பெரும்பான்மையுடன் அமோக வெற்றியீட்டிய J. R ஜெயவர்தனவினால் 1978 அரசியல் யாப்பினூடாக அறிமுகப்படுத்தப்பட்டது.
இலங்கை சுதந்திரம் பெற்றது முதல் 1977 தேர்தல் வரையில் நடந்த தேர்தல்கள் அனைத்தும் ஆங்கிலேயர் அறிமுகப்படுத்திய தொகுதிவாரியான First Past the Post System என்ற முறைமையில் நடந்தது. ஆனால் இந்த முறைமை மூலம் தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றம் செல்பவர்களின் எண்ணிக்கை மக்களின் ஆணையை சரியான முறையில் பிரதிபலிப்பதாக  இருக்கவில்லை.
1977 தேர்தலில் 50.92% வாக்குகளை பெற்ற UNP மொத்தம் 140 உறுப்பினர்களை வென்று (மொத்தம் 168 உறுப்பினர்களில்) 83% வீதமான உறுப்பினர்களை வென்றெடுத்தது. ஆனால் தோல்வியுற்ற SLFP 29.72% வாக்குளை எடுத்திருந்தும்  8 M.P களை மாத்திரமே பெற்றது. அதேசமயம் 6.75% வாக்குகளை  பெற்ற தமிழர் விடுதலை கூட்டணி கட்சி 18 உறுப்பினர்களை பெற்று பாராளுமன்றத்தில் எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றது.
இப்படியான பெரிய குறைபாட்டினை கொண்டிருந்த தொகுதி வாரியான தேர்தல் (FPP) முறையை மாற்றி ஜெயவர்தன அவர்கள் விகிதாசார பிரதிநிதித்துவ முறைமையை அறிமுகப்படுத்தியது உண்மையில் மிகச்சிறந்த செயலாகும்.
1977 க்கு பின்பு விகிதாசார பிரதிநிதித்துவ முறையில் நடந்த தேர்தல்களின் அனைத்திலுமே மக்கள் அளித்த வாக்குகளுக்கு ஏற்ற விகிதத்தில் அரசியல் கட்சிகள் பாராளுமன்ற உறுப்பினர்களை பெறக்கூடியதாக இருந்தது (except for the Tamil parties TULF / TNA). Majority of the Electors got some kind of value for their votes.
மேலும், கடைசியாக 2010 ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலை விடுத்து அதற்கு முன்னர் நடந்த அனைத்து தேர்தல்களின் முடிவுகள் ஒரே மதிரியாகவே அமைந்தன. அதாவது ஆட்சி அமைப்பதற்கு UNP அல்லது SLFP கட்சிகளுக்கு சிறுபான்மை கட்சிகளின் ஆதரவு மிகவும் அவசியமாக இருந்தது.
ஆனால் இந்த முறைமையில் இருந்த ஒரே ஒரு குறைபாடான ஒரே கட்சியின் வேட்பாளர்களிடையே இடப்பட வேண்டிய தெரிவு வாக்கு என்பது உட்கட்சி போட்டியை தூண்டுவதால் இது பெரும் சாபக்கேடாக பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த சாபக்கேடை நீக்குவதற்கான தீர்வு என்ற போர்வையில் கொண்டுவரப்படவிருக்கின்ற தேர்தல் மறுசீரமைப்பு திட்டம் தேசியவாத சிங்கள கட்சிகளான SLFP / JHU ஆகியவற்றின் மிகவும் ஆபத்து மிகுந்த சூழ்ச்சியான திட்டம் என்பதில் சந்தேகம் இல்லை.
மறுபடியும் 160 தேர்தல் தொகுதிகளை அறிமுகப்படுத்தி பெரும்பான்மையான சிங்கள தொகுதிகளை வெல்வதன் மூலம் சிறுபான்மை கட்சிகளின் ஆதரவுகள் இன்றி இலகுவாக அறுதி பெரும்பான்மையை பெற்று ஆட்சி அமைக்கலாம் என்று SLFP / JHU கட்சிகளின் கூட்டணி ஒரு மிகப்பெரிய சதியை அரங்கேற்றி இருப்பது இன்னும் மக்களுக்கு தெளிவுபடுத்தப்படாமல் இருப்பது  கவலைக்குரியது.
மஹிந்த தரப்பின் SLFP இன் கோரிக்கையான எம் பிக்களின் மொத்த எண்ணிக்கையை 255 ஆக அதிகரித்து 160 தொகுதிகள் ஊடாக 165 FPP உறுப்பினர்களை  தெரிவு செய்யும் திட்டமானது முஸ்லிம் மற்றும் மலையக கட்சிகளின் பேரம் பேசும் அதிகாரத்தை ( bargaining power) அடியோடு இல்லாதொழிப்தற்கான பெரும் செயல் திட்டமாகும்.
1977 இல் நடந்த தேர்தலில் சிறிமா அம்மையாரின் பொருளாதார கொள்கை மக்கள் மீது திணித்த சுமை தேர்தலில் பேசுபொருளாக (Core Election Issue) இருந்தது. அதேபோல் மகிந்த ராஜபக்ச என்று ஆட்சியை தொடங்கினாரோ அன்றிலிருந்து இன்று வரை இனவாதம் ஒன்றுதான் தேர்தல் வெற்றியை தீர்மானிக்கிறது. அதிகமான பெரும்பான்மை சிங்களவர்களும் எந்தக் கட்சி அதிகமாக இனவாதம் பேசுகிறதோ அந்த கட்சிக்கே அதிக வாக்குகளை அளித்துப் பழகிவிட்டார்கள்.
இன்று அப்பட்டமாக இனவாதம் பேசும் UPFA (SLFP) இன் திட்டமானது அதிக அளவில் தேர்தல் தொகுதிகளை கோருவதன் மூலம் அதிகளவு சிங்கள தொகுதிகளை உருவாக்கி சிங்கள இனவாதிகளின் வாக்குகள் மூலம் இலகுவாக அறுதிப் பெரும்பான்மையை எட்டுவது என்பதேயாகும்.
அவர்கள் கோருகின்ற 160 தொகுதிகளில் 134 தனி சிங்கள தொகுதிகளும் 26 சிறுபான்மையினரின் தொகுதிகளும்அடங்கும். சிறுபான்மையினர் தொகுதிகளின் விபரங்களாவன,  வடக்கு கிழக்கு மாகாணங்களில் Potuvil, Sammanthurai, Kalmunai, Batticaloa (2), Pattiruppu, Kalkuda, Trincomalee, Muttur, Mannar, Vavuniya, Mullaitivu & another 6 electorates in Jaffana Electoral Districts (based on the 2014 Electoral List in accordance with the Article 98 (3), (4), (5) & (6) of the Constitution). வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் : Colombo Central, Puttalam, Beruwala, Harispathuwa, Kotmale & Nuwara Eliya/Maskeliya (will be separated into 3 electorates).
FPP முறையின் கீழ் 134 சிங்கள தொகுதிகளில் 50% க்கும் அதிகமான வாக்குகள் எடுத்தாலே 85% வீதமான தொகுதிகளை வெல்ல முடியும் (1977 election results scenario will repeat). அதாவது 114 தொகுதிகளில் அவர்களால் இலகுவாக வெற்றி பெற முடியும்.  இன்னமும் 14 தொகுதிகள் District PR & National List MPs மூலமாகவும் கிடைத்ததால் அறுதி பெரும்பான்மை கிடைத்து சிறுபான்மை கட்சிகளின் எந்த ஒரு உதவியும் இல்லாமல் ஆட்சி அமைத்துவிடலாம்.
மஹிந்த ஆதரவு SLFP குழுவினரின் திட்டம் இப்படி இருக்க, ஜனாதிபதி மைத்திரியின்  புதிய திட்டமான 237 மொத்த உறுப்பினர்களில்  (145 FPP members, 55 District PR members & 37 National List Members) சிங்கள கட்சிகளுக்கு இலகுவாக பெரும் வெற்றியை பெற்று கொடுத்து சிறுபான்மை கட்சிகளின் பேரம் பேசும் சக்தியினை அடியோடு இல்லாது ஒழித்துவிடும்.
Chances are there that after delimitation of electorates, Colombo Central & Harispathuwa will become single member constituencies. NuwaraEliya-Maskeliya will be made into two separate electorates. Only Batticaloa and Potuvil will remain as multi member’s constituencies.
இறுதியில் 143 தேர்தல் தொகுதிகள் உருவாக்கப்படலாம். அதில் மட்டக்களப்பும் பொத்துவிலும் இரட்டை தொகுதிகள் என்றால் மொத்தம் 145 பேர்  FPP முறைமையின் கீழ் தெரிவு செய்யப்படுவர். இந்த 143 தொகுதிகளில் 23 சிறுபான்மை தொகுதிகளும் 120 சிங்கள தொகுதிகளும் உள்ளடக்கப்படலாம்.
120 சிங்கள தொகுதிகளில் 50% வாக்குகள் எடுத்தாலே 85% தொகுதிகளை அதாவது 102 தொகுதிகளை இலகுவில் வெல்ல முடியும். (Again 1977 scenario ) 237 பேர் உள்ள பாராளுமன்றத்தில் அறுதி பெரும்பான்மையின் எண்ணிக்கை 119 ஆகும். ஆட்சியமைக்க தேவைப்பட்ட மற்ற 17 மெம்பர்கள் District PR மற்றும் National List மூலம் இலகுவாகவே கிடைக்கும்.
இப் புதிய முறைமையின் கீழ் சிங்கள தொகுதிகளின் எண்ணிக்கை  அதிகரிப்பதால் (due to the higher number of FFP MPs) வெற்றிபெறும் இனவாதம் பேசும் சிங்கள கட்சிகளுக்கு இனி சிறுபான்மை கட்சிகளின் உதவி தேவைபட மாட்டாது என்பது நிச்சயம்.
chart
Loading...