|
பட்டமேற்படிப்பு டிப்ளோமா (உள்ளக) முழுநேர பயிற்சி நெறி 2016 இற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை கையளிக்க வேண்டிய இறுதித் திகதி ஜூலை 24 ஆம் திகதி ஆகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சின் தேசிய கல்வி பீட கிளையின் ஒருங்கிணைப்புடன் கொழும்பு- பேராதனை- மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பல்கலைக்கழகங்களில் பரீட்சைகள் நடைபெறவுள்ளன.
இப்பாட நெறியில் இணைத்துக்கொள்வதற்கான கல்வி தகைமைகள் குறித்த வர்த்தமானி அறிவித்தல் கடந்த 26ஆம் திகதி வௌியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
|
