Monday, 4 January 2016

ஈரானுடனான ராஜீய உறவுகளை சவுதி அரேபியா முறித்துக் கொண்டுள்ளது.

Image copyrightEPA
Image captionஇரானிலுள்ள சவுதி அரேபியா தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டது
ஷியா சிறுபான்மை இன மதகுரு ஒருவருக்கு சவுதி அரேபியா சனிக்கிழமை மரண தண்டனையை நிறைவேற்றியதை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே உறவுகள் மோசமடைந்தன.
கடந்த சனிக்கிழமை ஷேக் நிம்ர்-அல்-நிம்ர் உட்பட 47 பேருக்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
பயங்கரவாதக் குற்றச்சாட்டில் அவர்கள் குற்றவாளிகள் எனக் கூறி அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
ஈரானுடனான ராஜதந்திர உறவுகள் முறித்துக் கொள்ளப் பட்டதை சவுதியின் வெளியுறவு அமைச்சர் அடேல்-அல்-ஜுபைர் உறுதிப் படுத்தியுள்ளார்.
Image copyrightEPA
Image captionஷியா பெருமபான்மை நாடுகளில் சவுதிக்கு எதிரான போராட்டங்கள் தொடருகின்றன.
இதையடுத்து சவுதியிலுள்ள அனைத்து ஈரானிய தூதரக அதிகாரிகள் அனைவரும் 48 மணி நேரத்துக்குள் வெளியேறுமாறு கூறப்பட்டுள்ளனர்.
அந்த மதகுருவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரானியத் தலைநகர் தெஹ்ரானிலுள்ள சவுதி தூதரகத்தை முற்றுகையிட்டு தாக்குதலை நடத்தினர்.   
Loading...