Monday, 15 February 2016

சோதிட நம்பிக்கையில் பின்புறம் திரும்பி அலுவலகத்தை திறந்து வைத்தார் மகிந்த!

சோதிட நம்பிக்கையில் பின்புறம் திரும்பி அலுவலகத்தை திறந்து வைத்தார் மகிந்த!
சோதிட நம்பிக்கையில் பின்புறம் திரும்பி அலுவலகத்தை திறந்து வைத்தார் மகிந்த!
முன்னாள் ஜனாதிபதி மகிந்தவுக்கு சோதிட நம்பிக்கை அதிகமாக உள்ளதன் காரணமாக தனது புதிய அலுவலகத்தை பின்புறம் திரும்பிக்கொண்டு திறந்து வைத்துள்ள சுவாரசியமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதிய அரசியல் அலுவலகம் நேற்று முன்தினம் பத்தரமுல்லையில் திறந்து வைக்கப்பட்டது.

இதற்கான சுபநேரத்தை அவரது ஆஸ்தான சோதிடர் சுமணதாச உள்ளிட்டோர் குறித்துக் கொடுத்திருந்தனர். எனினும் சோதிடர்கள் குறித்துக் கொடுத்த சுபநேரத்திற்கு உகந்த திசையானது அலுவலக நுழைவாயிலின் எதிர்த்திசையில் அமைந்திருந்தது.

இதன் காரணமாக மகிந்த ராஜபக்ச தனது அலுவலக நுழைவாயிலின் அருகில் வந்து எதிர்ப்புறமாக திரும்பி நின்று கொண்டு பின்புறமாக கைகளை நீட்டி நாடாவை வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்துள்ளார்.

சோதிட ரீதியான தோஷங்கள் காரண மாகவே தனது பதவி பறிபோனதாக இன்னும் நம்பிக் கொண்டிருக்கும் மகிந்த ராஜபக்ச, அதனை நிவர்த்தி செய்து பழைய அதிகாரத்தை எட்டிப்பிடித்துக் கொள்ள சோதிடத்தை நம்பி படும்பாடு காண்பவர்களுக்கு பெரும் சுவாரஸ்ய மூட்டுவதாகவே  அமைந்துள்ளது.      
Loading...