|
காணாமல் போனோர் மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக பாராளுமன்றத்தின் கவனத்தை ஈர்க்கவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாளை செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற அமர்வில் சபை ஒத்திவைப்பு பிரேரணையை முன்வைக்கவுள்ளது.
அத்துடன் எதிர்வரும் 25 ஆம் திகதி வியாழக்கிழமை பாராளுமன்றத்தை அரசியலமைப்பு பேரவையாக மாற்றுவது தொடர்பானவிவாதமும் பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
பாராளுமன்றத்தின் பெப்ரவரி மாதத்திற்கான இறுதி அமர்வு நாளை செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் சபையில் முன்வைக்கப்படவுள்ள காணாமல் போனோர் மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக சபை ஒத்தி வைப்பு பிரேரணை தொடர்பாக விவாதமும் நடைபெறவுள்ளது.
அதேவேளை பாராளுமன்றத்தை அரசியலமைப்பு பேரவையாக மாற்றுவது தொடர்பான விவாதம் எதிர்வரும் 25 ஆம் திகதி வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. புதிய அரசியலமைப்பை ஏற்படுத்துவதற்கான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை பெற்றுக் கொள்வதற்காகவே இந்த அரசியலமைப்பு பேரவை ஏற்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பான விவாதம் கடந்த ஜனவரி மாதம் 09 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெறவிருந்தது.
ஆனால் ஒன்றிணைந்த எதிர்கட்சி இது தொடர்பில் திருத்தங்களை முன்வைக்க வேண்டுமென்று எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக இந்த விவாதம் ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
|
Monday, 22 February 2016
![]() |
காணாமல் போனோர் குறித்த விவாதம் நாளை |
Loading...
