Saturday, 29 August 2015

அனைத்து வங்கிகளுக்கும் 2-ஆம், 4-ஆம் சனிக்கிழமைகள் விடுமுறை:














வங்கி ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று, மாதத்தின் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளை பொது விடுமுறையாக அறிவிக்க மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்பு ஒப்புக்கொண்டது.

இந்த முடிவு, செப்டம்பர் 1-ந் தேதியில் இருந்து அமலுக்கு வருவதாக ரிசர்வ் வங்கி நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. பொதுத்துறை, தனியார் வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், கிராமப்புற வங்கிகள், உள்ளூர் வங்கிகள் என அனைத்து வங்கிகளுக்கும் மாதத்தின் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகள் பொது விடுமுறை ஆகும்.

மாதத்தின் மற்ற சனிக்கிழமைகளில், அவை முழு வேலைநாளாக செயல்படும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
Loading...
  • Good Governance Necessary To Achieve Government’s Economic Vision 09.05.2016 - Comments Disabled
  • திரைப்படங்களை HUAWEI Nova3 Series மூலம் தயாரிக்கலாம்!04.10.2018 - Comments Disabled
  • வெள்ளை காரனை செவிட்டில் அறைந்த ராஜ விஜய் சிங்30.04.2015 - Comments Disabled
  •  ரஷ்ய விமானத்தின் பைலட்டை சுட்டுக்கொன்ற சிரிய கிளர்ச்சியாளர்கள்: இணையத்தில் பரவும் வீடியோ25.11.2015 - Comments Disabled
  • மலாலாவை தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் “ரகசிய விடுதலை”06.06.2015 - Comments Disabled