Thursday, 11 February 2016

யோசித இன்று நீதிமன்றில் ஆஜர்

யோசித இன்று நீதிமன்றில் ஆஜர்
யோசித இன்று நீதிமன்றில் ஆஜர்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோசித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினர் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளனர். சீ.எஸ்.என் தொலைக்காட்சியில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் யோசித உள்ளிட்ட நால்வர் அண்மையில் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதனையடுத்து கடுவலை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அவர்களை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது. இதன்படி இன்று யோசித உள்ளிட்ட குழுவினரை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
Loading...